உ.பி.யில் காவடி யாத்திரை பாதையில் இந்து அல்லாதவர்கள் கடைகளுக்கு தடை: ஆடையை அவிழ்த்து சோதித்த 6 பேருக்கு நோட்டீஸ்

உ.பி.யில் காவடி யாத்திரை பாதையில் இந்து அல்லாதவர்கள் கடைகளுக்கு தடை: ஆடையை அவிழ்த்து சோதித்த 6 பேருக்கு நோட்டீஸ்
வட மாநிலங்களில் ஜுலை 11-ம் தேதி முதல் ஸ்ரவண மாதம் தொடங்குகிறது. அன்று முதல் ஜுலை 24 வரை 13 நாட்களுக்கு சிவபக்தர்கள் காவடி எடுத்து சிவன் கோயில்களுக்கு பாத யாத்திரை செல்வது வழக்கம்

****AGNISIRAGU****

புதுடெல்லி: வட மாநிலங்களில் ஜுலை 11-ம் தேதி முதல் ஸ்ரவண மாதம் தொடங்குகிறது. அன்று முதல் ஜுலை 24 வரை 13 நாட்களுக்கு சிவபக்தர்கள் காவடி எடுத்து சிவன் கோயில்களுக்கு பாத யாத்திரை செல்வது வழக்கம். அதன்படி உ.பி.யில் புனித யாத்திரை செல்லும் சாலைகளில் உள்ள கடைகளை இந்து அல்லாதவர்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், கடை உரிமையாளரின் பெயர், கைப்பேசி எண் போன்றவற்றை கடைக்கு முன்னர் எழுதி வைக்க வேண்டும், யாத்திரை செல்லும் பாதைகளில் இறைச்சிக் கடைகள் வைக்க கூடாது என்று உ.பி. முதல்வர் ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். யாத்திரைக்கு கடந்த ஆண்டும் இதேபோல் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.

காவடி யாத்திரை செல்லும் பாதைகளில் இதுபோன்ற கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்று கடந்த 2023-ம் ஆண்டே யஷ்வீர் மஹராஜ் என்ற துறவி கோரிக்கை விடுத்திருந்தார். இவர் ‘‘யோகா சாதனா’’ என்ற ஆசிரமத்தை முசாபர்நகரில் நடத்தி வருகிறார்.

கடந்த 2 நாட்களுக்கு முன்னர் டெல்லி - டேராடூன் நெடுஞ்சாலையில் உள்ள பண்டிட் வைஷ்னோவ் தாபாவில் யோகா சாதனாவை சேர்ந்த சீடர்கள் சோதனை நடத்தினர். ஆதார் அட்டையின்படி ஒரு கடையின் உரிமையாளர் பெயர் முஸ்லிம் என்று தெரிய வந்துள்ளது. அதன்பின்னர் ஊழியர்களின் கீழாடையை அவிழ்த்து சீடர்கள் பார்த்துள்ளனர்.

****AGNISIRAGU****