4 விரைவு ரயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகளின் எண்ணிக்கை 4 ஆக அதிகரிப்பு

4 விரைவு ரயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகளின் எண்ணிக்கை 4 ஆக அதிகரிப்பு
4 விரைவு ரயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகளின் எண்ணிக்கை 4 ஆக அதிகரிப்பு

சென்னை: தெற்கு ரயில்​வே​யில் 4 விரைவு ரயில்​களில் முன்​ப​திவு இல்​லாத பெட்​டிகள் 4 ஆக அதி​கரிக்​கப்பட உள்​ளது. ரயில்வே வாரி​யத்​தின் உத்​தர​வுப்​படி, முன்​ப​திவு இல்​லாத பயணி​களின் தேவையை கருத்​தில் கொண்​டு, விரைவு ரயில்​களில் முன்​ப​திவு இல்லாத பெட்​டிகள் கூடு​தலாக இணைத்து இயக்​கப்​படு​கின்​றன.

அந்த வகை​யில், மேலும் 4 விரைவு ரயில்​களில் தற்​போதுள்ள 2 முன்​ப​திவு இல்​லாத பெட்​டிகள் 4 ஆக அதி​கரித்து இயக்​கப்பட உள்ளது. மும்பை சி.எஸ்​.எம்​.டி. - எழும்​பூர் விரைவு ரயி​லில் (22157-22158) இரு மார்க்​கத்​தி​லும் வரும் செப்​.5-ம் தேதி​முதல் முன்​ப​திவு இல்லாத பெட்​டிகள் 4 ஆக அதி​கரித்து இயக்​கப்​படும். எழும்​பூர் - சேலம் விரைவு ரயி​லில் (22154-22153) இரு மார்க்​கத்​தி​லும், வரும் செப்​.6-ம் தேதி​முதல் முன்​ப​திவு இல்​லாத பெட்​டிகள் 4 ஆக அதி​கரித்து இயக்​கப்​படும்.

தாதர் - புதுச்​சேரி விரைவு ரயி​லில் (11005-11006) வரும் செப்​.7-ம் தேதியி​லிருந்​தும், திருநெல்​வேலி - தாதர் விரைவு ரயி​லில் (11021-11022) வரும் செப்​.9-ம் தேதியி​லிருந்​தும் முன்​ப​திவு இல்​லாத பெட்​டிகள் 4 ஆக அதி​கரித்து இயக்​கப்​படும். இத்​தகவல் தெற்கு ரயில்வே செய்திக்​குறிப்​பில்​ தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.