தைலாபுரத்தில் பா.ம.க. 37-வது ஆண்டு விழா: அன்புமணியின் கருத்து குறித்து ராமதாஸ் பதில்!

தேர்தலில் ஆட்சி, அதிகாரத்தில் பங்கு என அன்புமணி கூறியது குறித்து செய்தியாளரின் கேள்விக்கு எழுப்பினர். அதற்கு பதில் அளித்த ராமதாஸ், தேர்தலில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என அன்புமணி பேசியது அவருடைய கருத்து என்று கூறினார்.
விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் பா.ம.க.வின் 37-வது ஆண்டு விழா நடைபெற்றது. பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தைலாபுரம் தோட்டத்தில் உள்ள பெரியார், கார்ல் மார்க்ஸ், அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பா.ம.க. கட்சிக்கொடியை அவர் ஏற்றி வைத்து தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.
பா.ம.க.வின் 37-வது ஆண்டு விழாவில் கட்சி தொண்டர்கள் பங்கேற்றனர். தலைவர் அன்புமணி விழாவை புறக்கணித்தார். இந்நிலையில் வரும் தேர்தலில் ஆட்சி, அதிகாரத்தில் பங்கு என அன்புமணி கூறியது குறித்து செய்தியாளரின் கேள்விக்கு எழுப்பினர். அதற்கு பதில் அளித்த ராமதாஸ், தேர்தலில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என அன்புமணி பேசியது அவருடைய கருத்து என்று கூறினார்.