விவசாயிகளுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்.. இப்போ சொன்னா வெளியில் தெரிந்துவிடும் - இபிஎஸ் சூசகம்

கோவை: விவசாயிகள் கேட்காத கோரிக்கைகள் நிறைய எங்களிடம் இருக்கின்றது, அதையும் செய்வோம். இப்பொது சொன்னால் வெளியில் தெரிந்துவிடும் என்று அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் நடத்த கலந்துரையாடல் கூட்டத்தில் தெரிவித்தார்.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் "மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்" என்கிற சுற்றுப் பயணத்தை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்குகிறார். இந்நிகழ்ச்சியை முன்னிட்டு, மேட்டுப்பாளையத்துக்கு எடப்பாடி பழனிசாமி வருகை புரிந்துள்ளார். முன்னதாக, வனபத்திரகாளியம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் தேக்கம்பட்டி பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் விவசாயிகள், நெசவாளர்கள் மற்றும் செங்கல் உற்பத்தியாளர்களுடன் கலந்துரையாடினார்.
அப்போது, விவசாயிகள், நெசவாளர்கள், செங்கல் உற்பத்தியாளர்கள் மத்தியில் எடப்பாடி பழனிச்சாமி பேசியதாவது: மத்திய அரசுக்கு அனுப்பிய அவினாசி அத்திகடவு திட்டம் மத்திய அரசால் திருப்பி அனுப்பப்பட்டது. இதையடுத்து, மாற்று திட்டமாக அவினாசி அத்திகடவு திட்டம் அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்டது.
விவசாயிகள் மனம் குளிரும் அளவிற்கு பாசனம் பெறும் வகையில் அவினாசி அத்திகடவு திட்டம் ஆட்சிக்கு வந்தவுடன் விரிவாக செயல்படுத்தப்படும். ஆயிரம் கோடி மதிப்பீட்டில் திட்டமிடப்பட்ட அந்த திட்டம் இந்த ஆட்சியில் கைவிடப்பட்டது. விவசாயிகளின் ஆதரவுடன் மீண்டும் ஆட்சிக்கு வரும்போது விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்.
விவசாயிகளுக்கான ஏரி, குளங்கள் அதிமுக ஆட்சியில் தூர்வாரப்பட்டது. ஒரு சொட்டு நீர் கூட வீணாகமல் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. உள்ளாட்சித் துறை மூலமும் தூர்வாரப்பட்டது. இந்த ஆட்சியில் தூர்வாரும் பணியை கிடப்பில் போட்டுவிட்டனர். அவினாசி அத்திக்கடவு பழைய திட்டத்தில் பவானி அணை நிரம்பிய பின்புதான் தண்ணீர் எடுக்க முடியும். அதை செயல்படுத்த 15 வருடம் ஆகும்
கோவை: விவசாயிகள் கேட்காத கோரிக்கைகள் நிறைய எங்களிடம் இருக்கின்றது, அதையும் செய்வோம். இப்பொது சொன்னால் வெளியில் தெரிந்துவிடும் என்று அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் நடத்த கலந்துரையாடல் கூட்டத்தில் தெரிவித்தார்.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் "மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்" என்கிற சுற்றுப் பயணத்தை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்குகிறார். இந்நிகழ்ச்சியை முன்னிட்டு, மேட்டுப்பாளையத்துக்கு எடப்பாடி பழனிசாமி வருகை புரிந்துள்ளார். முன்னதாக, வனபத்திரகாளியம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் தேக்கம்பட்டி பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் விவசாயிகள், நெசவாளர்கள் மற்றும் செங்கல் உற்பத்தியாளர்களுடன் கலந்துரையாடினார்.
அப்போது, விவசாயிகள், நெசவாளர்கள், செங்கல் உற்பத்தியாளர்கள் மத்தியில் எடப்பாடி பழனிச்சாமி பேசியதாவது: மத்திய அரசுக்கு அனுப்பிய அவினாசி அத்திகடவு திட்டம் மத்திய அரசால் திருப்பி அனுப்பப்பட்டது. இதையடுத்து, மாற்று திட்டமாக அவினாசி அத்திகடவு திட்டம் அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்டத
விவசாயிகள் மனம் குளிரும் அளவிற்கு பாசனம் பெறும் வகையில் அவினாசி அத்திகடவு திட்டம் ஆட்சிக்கு வந்தவுடன் விரிவாக செயல்படுத்தப்படும். ஆயிரம் கோடி மதிப்பீட்டில் திட்டமிடப்பட்ட அந்த திட்டம் இந்த ஆட்சியில் கைவிடப்பட்டது. விவசாயிகளின் ஆதரவுடன் மீண்டும் ஆட்சிக்கு வரும்போது விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்.
விவசாயிகளுக்கான ஏரி, குளங்கள் அதிமுக ஆட்சியில் தூர்வாரப்பட்டது. ஒரு சொட்டு நீர் கூட வீணாகமல் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. உள்ளாட்சித் துறை மூலமும் தூர்வாரப்பட்டது. இந்த ஆட்சியில் தூர்வாரும் பணியை கிடப்பில் போட்டுவிட்டனர். அவினாசி அத்திக்கடவு பழைய திட்டத்தில் பவானி அணை நிரம்பிய பின்புதான் தண்ணீர் எடுக்க முடியும். அதை செயல்படுத்த 15 வருடம் ஆகும்.
தொட்டிபாலம், டனல் போன்றவை அமைக்க வேண்டும். வனத்துறை அனுமதி வேண்டும், மத்திய அரசு அனுமதி வேண்டும் என இப்படி பல பிரச்சனைகள் இருந்தன. ஆனால், எப்படியாவது விவசாயிகளுக்குத் தண்ணீர் கொடுக்க வேண்டும் என்பதற்காக அதிமுக ஆட்சியில் சிறப்புக் குழு அமைத்து அவினாசி அத்திக்கடவு திட்டம் மாற்று திட்டமாக செயல்படுத்தபட்டது.
நான் விவசாயி, இன்றைக்கும் விவசாயம் செய்து கொண்டிருக்கின்றேன். அதனாலதான் என்னை யாரும் எதுவும் செய்ய முடியவில்லை. இந்தியாவிலயே சொட்டு நீர் பாசனத்திற்கு அதிக நிதியை அதிமுக ஆட்சியில் பெற்றுக் கொடுத்தோம். கால்நடை துறைக்காக அதிமுக ஆட்சியில் உருவாக்கப்பட்ட ஆராய்ச்சி மையம் பூட்டிக் கிடக்கின்றது. இதுபோன்ற பல திட்டங்கள் முடங்கி இருக்கின்றன.