பாலத்தில் மோதி அந்தரத்தில் தொங்கிய லாரியில் இருந்து குதித்த 4 பேர் உயிரிழப்பு

பாலத்தில் மோதி அந்தரத்தில் தொங்கிய லாரியில் இருந்து குதித்த 4 பேர் உயிரிழப்பு
பாலத்தில் மோதி அந்தரத்தில் தொங்கிய லாரியில் இருந்து குதித்த 4 பேர் உயிரிழப்பு

ஹைதராபாத்: தெலங்​கானா மாநிலம், காமாரெட்டி மாவட்​டத்​தில் 161-வது தேசிய நெடுஞ்​சாலை​யில் பிட்​லம் எனும் ஊரிலிருந்துயட்​னூரு எனும் இடத்​துக்கு ஒரு லாரி நேற்று சென்று கொண்​டிருந்​தது.

அப்​போது லாரி​யின் கேபினில் 4 பேர் அமர்ந்​திருந்​தனர். லாரி ஒரு பாலத்​தின் மீது செல்​லும்​போது, ஸ்டியரிங்கை திருப்ப முடி​யாமல் லாரி ஓட்​டுநர் சாலை​யில் குதித்து உயிர் தப்​பி​னார்.

ஆனால், லாரி பாலத்​தின் தடுப்பு சுவரின் மீது மோதி​ அந்​தரத்​தில் நின்​றது. அதே சமயத்​தில் லாரி​யின் கேபினில் இருந்த 4 பேரும் 20 மீட்​டர் கீழே உள்ள சர்​வீஸ் சாலை​யில் விழுந்​தனர். இதில் ஒரு​வர் சம்பவ இடத்​திலேயே உயி​ரிழந்​தார். மீத​முள்ள மூவரும் மருத்​து​வ​மனை​யில் உயி​ரிழந்​தனர். தலைமறை​வான லாரி ஓட்​டுநரை போலீஸார் தேடி வரு​கின்​றனர்.