கடந்த ஆண்டு சைபர் குற்றங்கள் மூலமாக ரூ.23,000 கோடியை இழந்த இந்தியர்கள்

கடந்த ஆண்டு சைபர் குற்றங்கள் மூலமாக ரூ.23,000 கோடியை இழந்த இந்தியர்கள்
கடந்த ஆண்டு சைபர் குற்றங்கள் மூலமாக ரூ.23,000 கோடியை இழந்த இந்தியர்கள்

புதுடெல்லி: இந்தியர்களிடமிருந்து டிஜிட்டல் மோசடிகள் மூலமாக கடந்த 2024-ம் ஆண்டில் ரூ.23,000 கோடி மோசடி செய்யப்பட்டுள்ளதாக டேட்டாலீட்ஸ் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மேலும் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த 2024-ல் சைபர் குற்றவாளிகள் மூலம் ரூ.22,842 கோடியை இந்தியர்கள் இழந்துள்ளனர். இந்த நிலையில், நடப்பாண்டில் இந்தியர்கள் டிஜிட்டல் மோசடி மூலம் இழக்கும் தொகை ரூ.1.2 லட்சம் கோடியாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அதேபோன்று, சைபர் குற்றங்கள் தொடர்பாக 2024-ல் சுமார் 20 லட்சம் பேர் புகார் அளித்துள்ளனர்.