ட்ரம்ப் அதிபரான பிறகு தினமும் சராசரியாக 8 இந்தியர்கள் அமெரிக்காவிலிருந்து நாடுகடத்தல்

ட்ரம்ப் அதிபரான பிறகு தினமும் சராசரியாக 8 இந்தியர்கள் அமெரிக்காவிலிருந்து நாடுகடத்தல்
ட்ரம்ப் அதிபரான பிறகு தினமும் சராசரியாக 8 இந்தியர்கள் அமெரிக்காவிலிருந்து நாடுகடத்தல்

பெங்களுரு: அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பொறுப்பேற்ற பிறகு தினமும் சராசரியாக 8 இந்தியர்கள் நாடுகடத்தப்படுகின்றனர்.

அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பொறுப்பேற்ற பிறகு சட்டவிரோதமாக குடியிருப்பவர்களை நாடு கடத்தும் நடவடிக்கையை தீவிரப்படுத்த உத்தரவிட் டார். இதன்படி சராசரியாக தினமும் 8 இந்தியர்கள் நாடுகடத்தப்படுகின்றனர். இதற்கு முன்பு ஜோ பைடன் அதிபராக இருந்தபோது ஜனவரி 2020 - டிசம்பர் 2024) சராசரியாக தினமும் 3 இந்தியர்கள் நாடுகடத்தப்பட்டனர்.

கடந்த 2020-ம் ஆண்டு ஜனவரி முதல் 2025-ம் ஆண்டு ஜூலை மாதம் வரையி​லான காலத்​தில் மொத்​தம் 7,244 இந்​தி​யர்​கள் பல்​வேறு காரணங்​களுக்​காக நாடு​கடத்​தப்​பட்​டுள்​ளனர். இந்த எண்​ணிக்​கை​யில் சுமார் 25% பேர் (1,703) ட்ரம்ப் அதிப​ரான 6 மாத காலத்​தில் இந்​தி​யா​வுக்கு திருப்பி அனுப்​பப்​பட்​டுள்​ளனர்.

இந்த நடவடிக்​கை​யின்​போது மனித உரிமை​களை மீறும் வகை​யில் சிலர் நடத்​தப்​பட்​ட​தாக புகார் எழுந்​தது. இதையடுத்​து, மனித உரிமை​களை மீறும் வகை​யில் நடந்​து​கொள்​ளக் கூடாது என்று அமெரிக்க அரசை மத்​திய அரசு வலி​யுறுத்​தி​யது.

இந்த ஆண்​டில் அமெரிக்​கா​விலிருந்து நாடு கடத்​தப்​பட்ட 1,703 பேரில் அதி​கபட்​ச​மாக பஞ்​சாபைச் சேர்ந்​த 620 பேர் உள்ளனர். இதற்கு அடுத்​த​படி​யாக ஹரி​யானா (604), குஜ​ராத் (245), உத்தர பிரதேசம் (38) மற்​றும் கோவா (26), மகா​ராஷ்டிரா (20), டெல்லி (20), தெலங்​கானா (19), தமிழ்​நாடு (17), ஆந்​திரா (12), உத்​த​ராகண்ட் (12), கர்​நாடகா (5) ஆகிய மாநிலங்​களைச்​ சேர்ந்​தவர்​கள்​ இடம்​பெற்​றனர்​.