நாகர்கோவில்-மும்பை எக்ஸ்பிரஸ் உள்பட ரெயில்கள் போக்குவரத்தில் மாற்றம்

நாகர்கோவில்-மும்பை எக்ஸ்பிரஸ் உள்பட ரெயில்கள் போக்குவரத்தில் மாற்றம்
கோவை-நாகர்கோவில் ரெயில் நாளை முதல் வருகிற 31-ந் தேதி வரை திண்டுக்கல் ரெயில் நிலையத்துடன் நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை கோட்ட ரெயில்வேக்கு உள்பட்ட பகுதிகளில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடக்க இருப்பதால் தென்மாவட்ட ரெயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி கன்னியாகுமரி-சரளப்பள்ளி வாராந்திர சிறப்பு ரெயில் (வ.எண். 07229) வருகிற 18-ந் தேதி மற்றும் 25-ந் தேதிகளில் விருதுநகரில இருந்து மானாமதுரை, காரைக்குடி வழியாக திருச்சி செல்கிறது. இந்த ரெயில் அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை மற்றும் காரைக்குடி ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

கன்னியாகுமரி-ஹவுரா வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.12666) வருகிற 19-ந் தேதி மற்றும் 26-ந் தேதிகளில் விருதுநகரில் இருந்து மானாமதுரை, காரைக்குடி வழியாக திருச்சி செல்லும். இந்த ரெயில் மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி மற்றும் புதுக்கோட்டை ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

அதேபோல, கோவை-நாகர்கோவில் ரெயில் (வ.எண்.16322) நாளை முதல் வருகிற 31-ந் தேதி வரை திண்டுக்கல் ரெயில் நிலையத்துடன் நிறுத்தப்படும்.

மறுமார்க்கத்தில் நாகர்கோவில்-கோவை ரெயில் (வ.எண்.16321) வருகிற 26 மற்றும் 27-ந் தேதிகளில் விருதுநகரில் இருந்து மானாமதுரை, காரைக்குடி, திருச்சி, கரூர் வழியாக கோவை செல்லும். இந்த ரெயில் அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி மற்றும் புதுக்கோட்டை ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

நாகர்கோவில்-மும்பை எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.16352) வருகிற 20-ந் தேதி, 24-ந் தேதி மற்றும் 27-ந் தேதிகளில் விருதுநகரில் இருந்து மாற்றுப்பாதை வழியாக திருச்சி செல்லும்.

நாகர்கோவில்-கச்சிகுடா வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.16354) வருகிற 26-ந் தேதி விருதுநகரில் இருந்து அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி மற்றும் புதுக்கோட்டை வழியாக திருச்சி செல்லும்.