சேலத்தில் திமுக வெற்றி பெறவேண்டும். அதற்கு மேயரை மாற்ற வேண்டும் எனக் கருதினால் மாற்றிவிடுங்கள்”திமுக அவைத் தலைவர் சுபாஷ்

சேலத்தில் திமுக வெற்றி பெறவேண்டும். அதற்கு மேயரை மாற்ற வேண்டும் எனக் கருதினால் மாற்றிவிடுங்கள்”திமுக அவைத் தலைவர் சுபாஷ்
சேலத்தில் திமுக வெற்றி பெறவேண்டும். அதற்கு மேயரை மாற்ற வேண்டும் எனக் கருதினால் மாற்றிவிடுங்கள்”திமுக அவைத் தலைவர் சுபாஷ்

சேலத்தில் திமுக வெற்றி பெறவேண்டும். அதற்கு மேயரை மாற்ற வேண்டும் எனக் கருதினால் மாற்றிவிடுங்கள்” - மாவட்ட அமைச்சர் ராஜேந்திரனை சாட்சியாக வைத்துக் கொண்டு சேலம் மாநகர திமுக அவைத் தலைவர் சுபாஷ் இப்படிப் பேசியது கட்சிக்குள் கலகத்தை உண்டாக்கி வருகிறது.

2021 தேர்தலில் சேலம் மாவட்டத்தின் 11 தொகுதிகளில் 10 தொகுதிகளை அதிமுக கூட்டணி தான் வென்றது. சேலம் வடக்கில் மட்டுமே திமுக வென்றது. அந்த ஆதங்கத்தில் சேலத்துக்கு அமைச்சரவையில் இடமளிக்காமல்க்காமல் ஒதுக்கியது திமுக தலைமை (அண்மையில் தான் ராஜேந்திரனுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது), இந்த நிலையில், இம்முறை சேலம் மாவட்டத்தில் கணிசமான தொகுதிகளை கைப்பற்ற திமுக தலைமை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

கடந்த ஜூனில் சேலத்துக்கு விசிட் அடித்த முதல்வர் ஸ்டாலின், கட்சியைப் பலப்படுத்த திமுக-வினருக்கு ஆலோசனைகளை வழங்கியதுடன், “கட்சிப் பணியில் கவனம் செலுத்தாத நிர்வாகிகள் யாராக இருந்தாலும் மாற்றப்படுவார்கள்" என எச்சரிக்கை மணியும் அடித்துச் சென்றார். 

இந்த நிலையில், சேலம் மத்​திய மாவட்ட திமுக சார்​பில் சேலத்​தில் அண்​மை​யில் ‘ஓரணி​யில் தமிழ்​நாடு’ உறுப்​பினர் சேர்க்கை தொடர்​பான கூட்​டம் நடந்​தது. அதில், மாவட்​டச் செய​லா​ள​ரும் அமைச்​சரு​மான ராஜேந்​திரன் முன்​னிலை​யில் பேசிய மாநகர அவைத்​தலை​வர் சுபாஷ், மாவட்​டத்​தில் 11 தொகு​தி​களி​லும் வெற்றி பெற வேண்​டும் என்ற கவலை அமைச்​சருக்கு இருக்​கிறது. அதற்கு அனை​வ​ரும் ஒத்​துழைப்​புத் தர வேண்​டும். எனவே, செயல்​ப​டாதவர்களை களை எடுங்​கள். மாநக​ராட்​சி​யில் மக்​களின் குறை​களை சரி செய்​து​விட்​டார்​களா என்​றால் அது நிச்​சய​மாக இல்​லை. அதற்கு மேயரும் பொறுப்​பேற்க வேண்​டும். அவர் அமைச்​சரின் பேச்சை கேட்​கி​றாரா என்ற சந்​தேக​மும் உள்​ளது.

அமைச்​சரின் பேச்சை மேயர் கேட்​டிருந்​தால், சாதித்து இருக்க வேண்​டும். என்னை மாற்ற வேண்​டும் என அமைச்​சர் விரும்​பி​னால் தாராள​மாக மாற்​றலாம். அதே​போல் மேயரை​யும் மாற்ற வேண்​டும் என கரு​தி​னால் மாற்​றி​விடுங்​கள்” என அதிரடி​யாகப் பேசி​விட்டு அமர்ந்​தார். சுபாஷ் பேசிய இந்​தப் பேச்​சின் தாக்​கம் சேலம் திமுக-​வில் இன்​னும் சலசலத்​துக் கொண்​டிருக்​கிறது.

இது குறித்து நம்​மிடம் பேசிய சேலம் மாநகர் திமுக நிர்​வாகி​கள் சிலர், “சேலம் மேயர் பதவிக்​காக பலரும் மோதிய போது அமைச்​சர் ராஜேந்​திரன் தான் அஸ்​தம்​பட்டி பகுதி செய​லா​ள​ராக இருந்த ராமச்​சந்​திரனை மேய​ராக்​கி​னார். இதனால் தனது ஆதர​வாளர்​கள் மத்​தி​யிலும் எதிர்ப்பை சம்​பா​தித்​துக் கொண்​டார் ராஜேந்​திரன். துணை மேயர் பதவி​யும் காங்​கிரஸுக்கு ஒதுக்​கப்​பட்​ட​தால் மாநகர திமுக-​வினர் ஒட்​டுமொத்​த​மாக அப்​செட் ஆகிப் போனார்​கள்.

அமைச்​ச​ரால் கொண்​டு​வரப்​பட்​ட​வர் என்​ப​தால், திமுக-​வினர் யாருமே மேயர் ராமச்​சந்​திரனின் செயல்​பாடு​களை விமர்​சிக்​கத் தயங்​கினர். அப்​படி இருக்​கை​யில், அமைச்​சரை​யும் மேடை​யில் வைத்​துக் கொண்டு அவைத் தலை​வர் சுபாஷ் மேயருக்கு எதி​ராகப் பேசி இருப்​பது திமுக-​வில் விவாதப் பொருளாகி​யிருக்​கிறது. சேலம் மாநகரில் இம்​முறை பெரி​தாக எந்​தத் திட்​ட​மும் நிறை​வேற்​றப்​பட​வில்லை என்​பது பெரும் குறை​தான். ஆனால், அதற்​காக மேயரை மட்​டும் குறை சொல்​ல​முடி​யாது. அதி​முக ஆட்​சி​யில், முதல்​வரின் மாவட்​டம் என்ற பார்​வை​யில் சேலத்​துக்கு நிறை​யத் திட்​டங்​கள் கொண்​டு​வரப்​பட்​டன. அது​போல் இப்​போது இல்​லை.

சுபாஷ் சொல்​வதைப் போல மேயரை மாற்​று​வ​தால் மட்​டுமே இதெல்​லாம் சரி​யாகி​வி​டாது. இருக்​கின்ற கால அவகாசத்​தைப் பயன்​படுத்​தி​யா​வது சேலத்​துக்கு புதிய திட்​டங்​களைக் கொண்​டுவர வேண்​டும். அப்​போது தான் மக்​களை ஓரளவுக்​காவது திருப்​திப்​படுத்த முடி​யும். இல்​லா​விட்​டால் பழையபடியே சேலம் மாவட்​டத்தை ஒட்​டுமொத்​த​மாக அதி​முக-​விடம் கொடுத்​து​விட்டு நிற்க வேண்​டியது தான்” என்​ற​னர்.

மாநகர திமுக அவைத்​தலை​வர் சுபாஷிடம் பேசி​ய​போது, “எந்த உள்​நோக்​கத்​தோடும் மேயர் குறித்து நான் அப்​படி பேச​வில்​லை. ஆனால், கட்​சி​யின் வளர்ச்சி முக்​கி​யம். மேய​ராக இருப்​பவர் மக்​களின் பிரச்​சினை​களை தீர்ப்​ப​தில் ஆர்​வ​முடன் செயல்பட வேண்​டும்.

அதே​போல், கவுன்​சிலர்​களை அழைத்​து, வார்டு பிரச்​சினை​களைக் கேட்​டறிந்​து, அதனை தீர்த்து வைத்​தால் தான் மக்​களிடம் வாக்​குக் கேட்​டுப் போக முடி​யும். ஆனால், மக்​களோ கவுன்​சிலர்​களோ மனு கொடுத்​தால், ‘ஆகட்​டும் பார்க்​கலாம்’ என்ற பதிலை மட்​டுமே சொல்​கி​றார் மேயர். சேலத்​துக்​குத் தேவை​யான திட்​டங்​களைப் பெற மாவட்ட அமைச்​சரை அழைத்​துச் சென்று மற்ற அமைச்​சர்​களை சந்​திக்க வேண்​டும்.

மேய​ராக அவர் சரி​யாக செயல்​ப​டா​மல் இருப்​ப​தால் கட்​சி​யின் வளர்ச்சி பாதிக்​கப்​படு​கிறது. உட்​கட்சி விவ​காரத்தை பொது​வெளி​யில் பேசி​யது கட்சிக் கட்​டுப்​பாட்டை மீறிய செயல் தான். ஆனால், 50 ஆண்​டு​களுக்கு மேலாக திமுக-​வில் இருக்​கும் நான், கட்​சி​யின் வளர்ச்சி முக்​கி​யம் என்ற ஆதங்​கத்​தில் தான், ‘கட்​சி​யின் வளர்ச்​சிக்​காக என்னை வேண்​டு​மா​னாலும் மாற்​றுங்​கள், மேயரை வேண்​டு​மா​னாலும் மாற்​றுங்​கள்’ என்று பேசினேன்” என்​றார்.

இது குறித்து மேயர் ராமச்​சந்​திரனிடம் கேட்​டதற்​கு, “அது முடிந்​து​போன பிரச்​சினை, அது பற்றி பேச வேண்​டாம்” என்று முடித்​துக் கொண்​டார்.

முன்​பெல்​லாம் ஆளும் கட்​சி​யினரின் குறை​பாடு​களை எதிர்க்​கட்​சி​யினர் தான் வீதிக்கு கொண்​டு​வார்​கள். ஆனால் இந்த ஆட்​சி​யில், ஆளும் கட்​சி​யினருக்கு ஆங்​காங்கே ஆளும் கட்​சி​யினரே சேம் சைடு கோல் அடித்​துக் கொண்​டிருக்​கிறார்​கள்​.