மணிப்பூரில் குடியரசுத் தலைவரின் ஆட்சி மேலும் 6 மாதங்களுக்கு தொடரும்

மணிப்பூரில் குடியரசுத் தலைவரின் ஆட்சி மேலும் 6 மாதங்களுக்கு தொடரும்
மணிப்பூர்

புதுடெல்லி: வடகிழக்கு மாநில​மான மணிப்​பூரில் மைத்தேயி மற்​றும் குகி ஆகிய இரு இனக் குழுக்​களுக்கு இடையே கடந்த 2023-ம் ஆண்டு மே 3-ம் தேதி தொடங்​கிய மோதல் பெரும் வன்​முறை​யாக வெடித்​தது. இதில், 250 பேர் உயி​ரிழந்​ததுடன் 60,000-க்​கும் மேற்பட்டோர் தங்​கள் இருப்​பிடங்​களை விட்டு வெளி​யேறும் சூழல் ஏற்​பட்​டது.

கலவரத்தை கட்​டுப்​படுத்த முடி​யாத நிலை​யில் மணிப்​பூர் முதல்​வர் என்​.பிரேன் சிங் தனது பதவியை ராஜினமா செய்​வ​தாக அறிவித்​தார். இதையடுத்​து, கடந்த பிப்​ர​வரி 13 முதல் மணிப்​பூரில் குடியரசுத் தலை​வர் ஆட்சி அமல்​படுத்​தப்​பட்​டுள்​ளதுபுதுடெல்லி: வடகிழக்கு மாநில​மான மணிப்​பூரில் மைத்தேயி மற்​றும் குகி ஆகிய இரு இனக் குழுக்​களுக்கு இடையே கடந்த 2023-ம் ஆண்டு மே 3-ம் தேதி தொடங்​கிய மோதல் பெரும் வன்​முறை​யாக வெடித்​தது. இதில், 250 பேர் உயி​ரிழந்​ததுடன் 60,000-க்​கும் மேற்பட்டோர் தங்​கள் இருப்​பிடங்​களை விட்டு வெளி​யேறும் சூழல் ஏற்​பட்​டது.

கலவரத்தை கட்​டுப்​படுத்த முடி​யாத நிலை​யில் மணிப்​பூர் முதல்​வர் என்​.பிரேன் சிங் தனது பதவியை ராஜினமா செய்​வ​தாக அறிவித்​தார். இதையடுத்​து, கடந்த பிப்​ர​வரி 13 முதல் மணிப்​பூரில் குடியரசுத் தலை​வர் ஆட்சி அமல்​படுத்​தப்​பட்​டுள்​ளது..

இந்த நிலை​யில், மேலும், 6 மாதங்​களுக்கு குடியரசுத் தலை​வர் ஆட்​சியை நீ்ட்​டிக்க வகை செய்​யும் தீர்​மானத்தை மாநிலங்களவையில் மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷா அறி​முகப்​படுத்​தி​னார்.

மாநிலங்​களவை செய்​திக்​குறிப்​பில் இதுகுறித்து தெரிவிக்​கப்​பட்​டுள்​ள​தாவது: அரசி​யலமைப்​புச் சட்​டப் பிரிவு 356-ன் கீழ் மணிப்​பூர் மாநிலத்​தில் 2025, பிப்​ர​வரி 13-ல் பிரகடனம் செய்​யப்​பட்ட குடியரசுத் தலை​வர் ஆட்​சியை மேலும் 6 மாதங்​கள் தொடர்ந்து நீட்​டிப்​பதற்​கான ஒப்​புதலை அவை வழங்​கி​யுள்​ளது. இது, வரும் ஆகஸ்ட் மாதம் 13-ம் தேதியி​லிருந்து அமலுக்கு வரும். இவ்​வாறு செய்​திக்​குறிப்​பில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.மாநிலங்​களவை செய்​திக்​குறிப்​பில் இதுகுறித்து தெரிவிக்​கப்​பட்​டுள்​ள​தாவது: அரசி​யலமைப்​புச் சட்​டப் பிரிவு 356-ன் கீழ் மணிப்​பூர் மாநிலத்​தில் 2025, பிப்​ர​வரி 13-ல் பிரகடனம் செய்​யப்​பட்ட குடியரசுத் தலை​வர் ஆட்​சியை மேலும் 6 மாதங்​கள் தொடர்ந்து நீட்​டிப்​பதற்​கான ஒப்​புதலை அவை வழங்​கி​யுள்​ளது. இது, வரும் ஆகஸ்ட் மாதம் 13-ம் தேதியி​லிருந்து அமலுக்கு வரும். இவ்​வாறு செய்​திக்​குறிப்​பில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.ஒரு மாநிலத்​தில் அமல்​படுத்​தப்​படும் குடியரசுத் தலை​வர் ஆட்சி வழக்​க​மாக 6 மாதங்​கள் வரை நீ​டிக்​கும். ஆனாலும் இதனை, நாடாளு​மன்​றத்​தின் ஒப்​புதலுடன் ஒவ்​வொறு ஆறு மாத காலத்​துக்​கும் 3 ஆண்​டு​கள் வரை நீடிக்​க முடி​யும்​.