தமிழறிஞர் சாலமன் பாப்பையா காலமானார்

தமிழறிஞர் சாலமன் பாப்பையா காலமானார்
பல தலைமுறைகளுக்கு தமிழை ரசிக்க வைத்த குரல்… இன்று நம்மிடையே இல்லை.தமிழ் உலகிற்கு அவரது மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு.

பிரபல பட்டிமன்ற நடுவரும், தமிழறிஞருமான பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்கள் மதுரையில் தனது 90-வது வயதில் காலமானார். வயது மூப்பு காரணமாக அவர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 
தனது நகைச்சுவை கலந்த பேச்சாலும், சிறப்பான தமிழ் அறிவாலும் பட்டிமன்றங்களை மக்களிடம் கொண்டு சேர்த்த பெருமை அவருக்கு உண்டு. பல ஆண்டுகளாக தமிழ் மொழி மற்றும் இலக்கியத்திற்காக அவர் ஆற்றிய பணி குறிப்பிடத்தக்கது. 
அவரது தமிழ் சேவையைப் பாராட்டி கலைமாமணி மற்றும் பத்மஸ்ரீ உள்ளிட்ட விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. அவரது மறைவு தமிழ் இலக்கிய உலகிற்கும், பட்டிமன்ற ரசிகர்களுக்கும் பேரிழப்பாகும்.