உடனே அகற்றுங்க 3 வாரம் தான் டைம் உத்தரவிட்ட உயர்நீதிமன்றம்!!

உடனே அகற்றுங்க 3 வாரம் தான் டைம் உத்தரவிட்ட உயர்நீதிமன்றம்!!
உடனே அகற்றுங்க 3 வாரம் தான் டைம் உத்தரவிட்ட உயர்நீதிமன்றம்!!

சென்னை: சென்னை கே.கே. நகர் மற்றும் அசோக் நகர் பகுதிகளில் உள்ள சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிடப்பட்டு உள்ளது. முக்கிய சாலைகளின் நடைபாதைகள் மற்றும் சைக்கிள் தடங்களில் கட்டப்பட்டுள்ள பொதுக் கழிப்பறைகள், மின் பெட்டிகள், அம்மா உணவகங்கள் ஆகியவற்றை வேறு இடத்திற்கு மாற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

தலைமை நீதிபதி மாந்திர மோகன் ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி. அருள் முருகன் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வு, பொதுநல வழக்குத் தொடுத்த வழக்கறிஞர் வி.பி.ஆர். மேனன் தெரிவித்த பெரிய அளவிலான ஆக்கிரமிப்புகள் குறித்த குற்றச்சாட்டை சென்னை மாநகராட்சி தீவிரமாக மறுக்கவில்லை என குறிப்பிட்டது.

இதையடுத்து, பொதுக் கழிப்பறைகள் மற்றும் சமூக சமையலறைகள் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக தொடர்ந்து செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும். ஆனால் அவை நடைபாதையில் செயல்பட கூடாது. நடைபாதைகள் மற்றும் சாலைகள் போக்குவரத்துக்காக முழு அகலத்திலும் நீளத்திலும் கிடைக்கச் செய்வதையும் உறுதிசெய்யும் வகையில், மூன்று வாரங்களுக்குள் இடமாற்றுத் திட்டத்தை சமர்ப்பிக்குமாறு மாநகராட்சிக்கு உத்தரவிடப்பட்டது.