பள்ளி கட்டிடங்களின் தரத்தை உறுதிசெய்ய வாசன் வலியுறுத்தல்

பள்ளி கட்டிடங்களின் தரத்தை உறுதிசெய்ய வாசன் வலியுறுத்தல்
பள்ளி கட்டிடங்களின் தரத்தை உறுதிசெய்ய வாசன் வலியுறுத்தல்

சென்னை: அரசு பள்ளி கட்​டிடங்​கள் தரத்தை உறு​தி​செய்ய வேண்​டும் என தமாகா தலை​வர் ஜி.கே.​வாசன் வலி​யுறுத்​தி​யுள்​ளார். இதுதொடர்​பாக அவர் வெளி​யிட்ட அறிக்​கை​: ஈரோடு மாவட்​டம் கோபிச்​செட்​டி​பாளை​யம் அருகே உள்ள கூகலூர் ஊராட்சி ஒன்​றிய நடுநிலைப்​பள்ளி கட்​டிடத்​தின் மேற்​கூரை கடந்த 20-ம் தேதி இடிந்து விழுந்​தது.

அரசின் பள்​ளிக் கட்​டிடங்​களை யார் கட்​டி​னாலும், யார் திறந்து வைத்​தா​லும் கட்​டிடங்​களின் தரமானது ஒதுக்​கிய மதிப்​பீட்​டுக்கு ஏற்ப சற்​றும் குறை​யாமல் இருக்​கவேண்​டும்.

அதை​விடுத்து ஒதுக்​கிய மதிப்​பீட்​டில் லஞ்​சம், ஊழல் என கணக்​கிட்டு கட்​டிட வேலை பார்த்​தால் தரம் இருக்​காது. இவ்​வாறு தமிழகத்​தில் அரசாங்​கத்​தால் எந்த ஒரு திட்​டத்​துக்​கும் ஒதுக்​கப்​படும் நிதி, முழு​மை​யாக திட்​டத்​துக்​காக செல​விடப்​ப​டா​மல் விரயமாகி வரு​வது ஏற்​புடையதல்ல.

எனவே, கடந்த 4 ஆண்​டு​களில் அரசு பள்​ளி​களின் தரத்தை மேம்​படுத்த ஒதுக்​கப்​பட்ட நிதி முறை​யாக செல​விடப்​பட்​ட​தா, என்​பதை ஆய்வு செய்​து, கட்​டிடங்​களின் தரத்தை உறு​தி​ செய்​ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்​டும்.