எஞ்சின்களுக்கு எரிபொருள் கிடைக்கவில்லையா?ஏர் இந்தியா விபத்து வெளியானது அறிக்கை

*ஏர் இந்தியா விபத்து - வெளியான அறிக்கை*
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதில் 241 பேர் உயிரிழந்த விவகாரம்.
15 பக்கங்களை கொண்ட முதற்கட்ட விசாரணை அறிக்கையை வெளியிட்டது விமான விபத்து புலனாய்வு பணியகம்.
ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட 32 நொடிகளில் 2 எஞ்சின்களும் நின்றுபோனது கண்டுபிடிப்பு.
எஞ்சின்களுக்கு எரிபொருள் செல்வது தடைபட்டதால்தான் விபத்து ஏற்பட்டதாக ஆய்வில் தகவல்.
எஞ்சின்களுக்கு எரிபொருள் செல்லாதது குறித்து ஏர் இந்தியா விமான பைலட்கள் பேசிக்கொண்டது குரல் பதிவு மூலம் அம்பலம்.
ஏன் எரிபொருள் துண்டிக்கப்பட்டது என்று ஒரு பைலட் கேட்டதும், அதற்கு நான் அல்ல என்று மற்றொரு விமானி பதில் குரல் பதிவு.