சட்டவிரோத சிறுநீரக விற்பனையை தடுக்க வேண்டும்: முதல்வர் ஸ்டாலினுக்கு ஓபிஎஸ் கோரிக்கை

சட்டவிரோத சிறுநீரக விற்பனையை தடுக்க வேண்டும்: முதல்வர் ஸ்டாலினுக்கு ஓபிஎஸ் கோரிக்கை
சட்டவிரோத சிறுநீரக விற்பனையை தடுக்க வேண்டும்: முதல்வர் ஸ்டாலினுக்கு ஓபிஎஸ் கோரிக்கை

சென்னை: தமிழகத்​தில் சட்​ட​விரோத சிறுநீரக விற்​பனையை தடுக்க வேண்​டும் என்று முன்​னாள் முதல்​வர் ஓ.பன்​னீர்​செல்​வம் வலி​யுறுத்​தி​யுள்​ளார்.

இதுதொடர்​பாக அவர் வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: நாமக்​கல் மாவட்​டம், பள்​ளி​ பாளை​யத்​தைச் சேர்ந்த பெண்களை பெரிய மருத்​து​வ​மனை​களுக்கு அழைத்​துச் சென்று கிட்னி விற்​பனை செய்​யப்​படு​வ​தாக சமூகவலை​தளங்​களில் தகவல் பரவியது.

இதையடுத்​து, மேற்​கொண்ட விசா​ரணை​யில், திருச்​சி, பெரம்​பலூர் மற்​றும் கொச்சி ஆகிய இடங்​களில் உள்ள பெரிய மருத்துவமனை​களுக்கு கிட்னி விற்​பனை செய்​யப்​பட்​டுள்​ளது தெரிய​வந்​துள்​ளது. சட்ட விரோத கிட்னி விற்​பனையை கண்காணிக்க வேண்​டிய பொறுப்​பும், கடமை​யும் மாநில அரசுக்கு உண்​டு.

ஆனால், இதனைக் கண்​காணிக்க திமுக அரசு தவறி​விட்​டது. எனவே, முதல்​வர் ஸ்டா​லின் தனிக் கவனம் செலுத்​தி, சட்ட விரோத கிட்னி விற்​பனையை தடுக்க வேண்​டும்.இவ்​வாறு கூறப்​பட்​டுள்​ளது.

ஓபிஎஸ் வெளி​யிட்ட மற்​றொரு அறிக்​கை​யில், “அரசு கல்​லூரி​களில் 15 ஆண்​டு​களுக்​கும் மேலாக தொகுப்​பூ​தி​யத்​தில் கவுரவ விரிவுரை​யாளர்​கள், தலைமை ஆசிரியர் இல்​லாத பள்​ளி​கள், 10 ஆண்​டு​களுக்​கும் மேலாகி​யும் நிரந்​தரம் செய்​யப்​ப​டாத பகுதி நேர ஆசிரியர்​கள், மாணவ மாண​வியருக்கு மடிக் கணினி வழங்​காமை என பல குளறு​படிகள் அடங்​கிய துறை​யாக கல்​வித் துறை விளங்​கு​கிறது. கல்​வி​யில் சிறந்து விளங்​கிய தமிழகத்தை சீரழிக்கும் தி​முக அரசுக்கு கண்​டனத்​தைத் தெரி​வித்​துக் கொள்​கிறேன்​” என்று கூறியுள்ளார்.