இன்றைய இலக்கியம்

இன்றைய இலக்கியம்
விளம்பி நாகனார்

நான்மணிக்கடிகை

பாடல் எண்: 7 

"கள்வமென் பார்க்குந் துயிலில்லை காதலிமாட்டு

உள்ளம்வைப் பார்க்குந் துயிலில்லை ஒண்பொருள்

செய்வமென் பார்ககுந் துயிலில்லை அப்பொருள்

காப்பார்க்கும் இல்லை துயில்". . . 

                                                     -விளம்பி நாகனார் 

விளக்கம்:

              திருடர்களுக்கும் தூக்கம் இல்லை. ஒரு பெண்ணை விரும்பும் தலைமகனுக்கும் தூக்கம் இல்லை. செல்வத்தை ஈட்டுபவனுக்கும் தூக்கம் இல்லை. அச்செல்வத்தைத் திருடு போகாது காப்பாற்றுபவனுக்கும் தூக்கம் இல்லை.