இன்றைய இலக்கியம்

இன்றைய இலக்கியம்
விளம்பி நாகனார்

நான்மணிக்கடிகை 

 பாடல் எண்:2

"பறைபட வாழா அசுணமா உள்ளங்

குறைபட வாழார் உரவோர் - நிறைவனத்து

நெற்பட்ட கண்ணே வெதிர்சாம் தனக்கொவ்வாச்

சொற்பட வாழாதாஞ் சால்பு."

                                                      -விளம்பி நாகனார்.

விளக்கம்:

               கேகயப் பறவைகள் பறையோசையைக் கேட்டால் இறந்துவிடும். சான்றோர்கள் தன்மானக் குறைவு ஏற்பட்டால் உயிர் வாழ மாட்டார்கள். நெல்லுண்டான முதிர்ந்த மூங்கில் உடனே பட்டுப் போவது போல சான்றோர் தன் மீது பழி ஏற்பட்டால் உயிர் வாழ மாட்டார்கள்.