சிவா மன்னிப்பு கேட்காவிட்டால் முதல்வருக்கு கருப்பு கொடி..

சிவா மன்னிப்பு கேட்காவிட்டால் முதல்வருக்கு கருப்பு கொடி..
மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜர் குறித்து தி.மு.க., துணை பொதுச் செயலர்..

துாத்துக்குடி: மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜர் குறித்து தி.மு.க., துணை பொதுச் செயலர் சிவா எம்.பி., பேசிய கருத்திற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இந்நிலையில், சிவா எம்.பி.,யை கண்டித்து துாத்துக்குடியில் காங்., மாநில பொதுக்குழு உறுப்பி னர் பெருமாள்சாமி தலைமையில் நேற்று ஆர்ப் பாட்டம் நடந்தது. அப்போது, சிவா எம்.பி., யின் போட்டோவை வைத்து, அதில், நிர்வாகிகள் சிலர் செருப்பு மற்றும் துடைப்பத்தால் அடித்தனர்..

பெருமாள்சாமி கூறியதாவது:

காமராஜர் குறித்து பேச திருச்சி சிவாவுக்கு அருகதை இல்லை. சிவா எம்.பி.,யின் ஒழுக்கம் ஊருக்கே தெரியும். முதல்வர் அவரை கண்டித்து பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வைக்க வேண்டும். இல்லையென்றால், எங்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் துாத்துக்குடி வரும் முதல்வருக்கு கருப்புக்கொடி காட்டுவோம். சிவா எம்.பி., பேசியதற்கு மட்டுமே எங்கள் எதிர்ப்பு. வேறு எந்த நோக்கமும் கிடையாது...

இவ்வாறு அவர் கூறினார்...