பஞ்சாலை தொழிற்சங்கத்தின் சொத்துகளை எந்தக் கட்சியும் கட்டுப்படுத்த முடியாது: வைகோவுக்கு திருப்பூர் துரைசாமி பதில்

பஞ்சாலை தொழிற்சங்கத்தின் சொத்துகளை எந்தக் கட்சியும் கட்டுப்படுத்த முடியாது: வைகோவுக்கு திருப்பூர் துரைசாமி பதில்
பஞ்சாலை தொழிற்சங்கத்தின் சொத்துகளை எந்தக் கட்சியும் கட்டுப்படுத்த முடியாது: வைகோவுக்கு திருப்பூர் துரைசாமி பதில்

திருப்பூர்: தொழிற்​சங்க சொத்து விவ​காரத்​தில் வைகோ விவரம் தெரி​யாமல் பேசுகிறார். பஞ்​சாலை தொழிற்​சங்க சொத்​துகளை எந்​தக்​கட்​சி​யும் கட்​டுப்​படுத்த முடி​யாது என திருப்​பூர் சு.துரை​சாமி தெரிவித்துள்ளார்.

மதி​முக​வின் முன்​னாள் அவைத்​தலை​வ​ரான திருப்​பூர் சு.துரை​சாமி நேற்று செய்​தி​யாளர்​களிடம் பேசி​ய​தாவது: வைகோவுக்கு நெருக்​கடி ஏற்​பட்ட காலத்​தில் அவருக்​குப் பக்​கபல​மாக இருக்க வேண்​டும் என்​ப​தற்​காக நான் திமுக​விலிருந்து வெளியே வந்​தேன். ஆனால், இன்றோ நான் ரூ.350 கோடி மதிப்​புள்ள சொத்​துகளை அபகரித்​துள்​ள​தாக வைகோ பேசி​யுள்​ளார்.

பஞ்​சாலைத் தொழிலா​ளர்​கள் சங்​கத்​துக்​கென்று வாங்​கிய சொத்​துகள் சங்​கத்​துக்கு மட்​டுமே சொந்​த​மானது. தனிப்​பட்ட யாரும் அதற்கு உரிமை கோர முடி​யாது. மதி​முக​வில் பொருளாள​ராக இருந்த மாசிலாமணி, கணேசமூர்த்தி காசோலை​யில் கையெழுத்​திட்டது கிடை​யாது.

மதி​முக​வின் கணக்கு வழக்​கு​களை நிர்​வகிப்​பது பொருளாளரின் கடமை என்று விதி இருந்​தும், பொருளாளர் கையெழுத்​திட வேண்டிய இடத்​தில் பொதுச்செய​லா​ள​ரான வைகோ கையெழுத்​திட்டு 13 ஆண்​டு​காலம் கட்​சி​யின் பணத்தை எடுத்து செலவு செய்து வரு​கிறார்.

இதற்கு, அவரிடம் இருந்து எந்​தப் பதி​லும் வரவில்​லை. சொத்​துகள் அனைத்​தும் சங்​கத்​தின் பெயரில் மட்​டுமே இருக்​கின்​றன. அதனை எந்​தக் கட்​சி​யும் கட்​டுப்​படுத்த முடி​யாது. விவரம் தெரி​யாமல் வைகோ பேசுகிறார். வைகோ​வின் பேச்​சைக் கேட்டு வந்த இளைஞர்​களைப் படு​குழி​யில் தள்​ளி​விட்​டார். திமுகவை ஆதரிப்​பது என்று வந்​து​விட்ட பிறகு எதற்​குத் தனிக்​கட்​சி, பேசாமல் திமுகவுடனே மதி​முகவைச் சேர்த்து விட வேண்​டியது​தானே? இவ்​வாறு அவர் தெரிவித்​தார்​.