தேர்தல் ஆணையத்துக்கு எதிராக Atom bomb ஆதாரம் - ராகுல் காந்தி எச்சரிக்கைக்கு ராஜ்நாத் சிங் ரிப்ளை

முன்பு பாராளுமன்றத்தில் பூகம்பம் ஏற்படும் என்று மிரட்டினார்.
அவரது சொந்தக் கட்சியின் கைகளில் ரத்தம் படிந்துள்ளது.
தேர்தல் ஆணையம் பாஜவுக்காக வாக்கு திருட்டில் ஈடுபடுவதாகவும், இதுதொடர்பாக தன்னிடம் அணுகுண்டு போன்ற ஆதாரம் உள்ளதாகவும் மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசியிருந்தார். இந்நிலையில் இதற்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பதிலடி கொடுத்துள்ளார்.
பீகார் தலைநகர் பாட்னாவில் இன்று நடந்த நிகழ்ச்சியில் பேசிய ராஜ்நாத்சிங், "என்டிஏ கூட்டணி தலைமையிலான பாதை பீகாரின் முன்னேற்றத்துக்கானது. மற்றொரு பாதையான இந்தியா கூட்டணி, பீகாரை பழைய ஜாதி மோதல்களின் சகாப்தத்திற்கு அழைத்துச் செல்லும்.
ராகுல் தன்னிடம் அணுகுண்டு இருப்பதாக கூறுகிறார். அவ்வாறான அணுகுண்டு இருந்தால் அதை அவர் உடனடியாக வெடிக்கச்செய்ய வேண்டும். ஆபத்திலிருந்து தன்னைத்தானே அவர் காப்பாற்றிக்கொள்ள வேண்டும். ராகுலின் பேச்சு வரவிருக்கும் தேர்தலுக்கான ஒரு குறுக்கு வழி ஆகும்.
இப்படித்தான் முன்பு பாராளுமன்றத்தில் பூகம்பம் ஏற்படும் என்று மிரட்டினார். ஆனால் அங்கு பேசியபோது அது ஒரு ஈரமான பொய்யாக மாறியது.
மாநிலத்தில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல் சுதந்திரமாகவும் நியாயமாகவும் நடைபெறுவதை உறுதி செய்ய தேர்தல் ஆணையம் அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது.
ஒரு அரசியலமைப்பு அமைப்பைப் பற்றி அற்பமான அறிக்கைகளை வெளியிடுவது எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு உகந்தது அல்ல.
அவரது சொந்தக் கட்சியின் கைகளில் ரத்தம் படிந்துள்ளது. 1975ல் அவசரநிலையை அமல்படுத்தி ஜனநாயகத்தைக் கொல்ல முயன்றது என்பதை அவருக்கு நினைவூட்ட விரும்புகிறேன்" என்று தெரிவித்தார்.