இன்றைய இலக்கியம்

இன்றைய இலக்கியம்
விளம்பி நாகனார்

 நான்மணிக்கடிகை 

 பாடல் எண் :6

"திருவொக்கும் தீதில் ஒழுக்கம் பெரிய

அறனொக்கும் ஆற்றின் ஒழுகல் பிறானக்

கொலையொக்கும் கொண்டுகண் மாறல் புலையொக்கும்

போற்றாதார் மன்னர்ச் செலவு".

                                               -விளம்பி நாகனார்.

விளக்கம்:

                   நல்லொழுக்கம் செல்வம் போன்றது. முறையான இல்லற ஒழுக்கம் துறவறத்தைப் போன்று தூய்மையானது. பிறரைப் பழித்துப் புறங்கூறுதல் கொலை செய்தல் போன்றது. தம்மை மதியாதவரை மதித்தல் என்பது இழிதகைமையானது ஆகும்.