வத்சலா: 100 வயதைக் கடந்த ஆசியாவின் மூத்த யானை; முழு மரியாதையுடன் தகனம்.. நெகிழவைக்கும் கதை!

வத்சலா: 100 வயதைக் கடந்த ஆசியாவின் மூத்த யானை; முழு மரியாதையுடன் தகனம்.. நெகிழவைக்கும் கதை!
2003-ம் ஆண்டு வத்சலாவின் குடல் வெளியில் வரும் வரை தந்தத்தால் கடுமையாக தாக்கியுள்ளது ராம் பகதூர் என்ற ஆண் யானை

ஆசியாவின் அதி மூத்த யானை என்று கருதப்பட்ட 100 வயதைக் கடந்த வத்சலா யானை மத்திய பிரதேச மாநிலத்தில் உயிர் நீத்தது.

பன்னா புலிகள் சரணாலயத்தில் வாழ்ந்து வந்த வத்சலா, வெறும் யானை மட்டுமல்ல காட்டின் அமைதியைக் காத்துவந்த தலைமுறைகள் கடந்த தோழி என மத்திய பிரதேச முதலமைச்சர் அஞ்சலி செலுத்தியுள்ளார்.

வத்சலா யானையை முழு மரியாதையுடன் தகனம் செய்துள்ளனர் வனத்துறையினர். சரணாலயத்தில் சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை ஈர்க்கும் யானையாக வத்சலா இருந்துள்ளது.

எந்த ஒரு மூத்த பெண் யானைக்கும் அதன் கூட்டத்தில் பல பொறுப்புகள் இருக்கும். தலைமை தாங்கி வழிநடத்துவது மட்டுமல்லாமல் வத்சலா அங்கே குட்டி ஈனும் இளம் பெண்களுக்கு ஒரு பாட்டியை போல ஆதரவாக இருந்துள்ளது.