தோழியை மதுபோதையில் மிதக்கவிட்டு நண்பர்களுக்கு விருந்தாக்கிய பெண் கைது

தோழியை மதுபோதையில் மிதக்கவிட்டு நண்பர்களுக்கு விருந்தாக்கிய பெண் கைது
தோழியை மதுபோதையில் மிதக்கவிட்டு நண்பர்களுக்கு விருந்தாக்கிய பெண் கைது

வேலுார் மாவட்டத்தை சேர்ந்த, 23 வயது பெண், சென்னையில் தனியார் விடுதியில் தங்கி உள்ளார். இவருக்கு சென்னை பெரம்பூரை சேர்ந்த, 27 வயது பெண்ணுடன் நட்பு ஏற்பட்டது. இருவருக்கும் மது குடிக்கும் பழக்கம் இருந்தது.

கடந்த மாதம் 27ம் தேதி, பெரம்பூர் பெண், தன் தோழியை மொபைல் போனில் தொடர்பு கொண்டு, மாலை, 6:00 மணிக்கு, நுங்கம்பாக்கத்தில் உள்ள 'பப்'க்கு அழைத்துள்ளார்.

அதை ஏற்று, வேலுார் பெண், நுங்கம்பாக்கத்தில் உள்ள, 'பப்'புக்கு சென்றுள்ளார். அங்கு தோழிகள் இருவரும் மது குடித்துள்ளனர். பின், அருகேயுள்ள தனியார் தங்கும் விடுதி அறைக்கு சென்றுள்ளனர்.

அப்போது பெரம்பூர் பெண், தன் நண்பர்களான கொடுங்கையூரை சேர்ந்த மனாசே, 29, உள்ளிட்ட இருவரை, தனியார் தங்கும் விடுதிக்கு அழைத்துள்ளார்.

நள்ளிரவு வரை நான்கு பேரும் சேர்ந்து மது அருந்தி உள்ளனர். பேசிக்கொண்டே இருந்த போது, வேலுார் பெண் போதையில் மயங்கி துாங்கி விட்டார்.