​​​​​​​அடுத்து அமையும் அதிமுக ஆட்சியில் இரும்புக் கரம் கொண்டு குற்றங்கள் தடுத்து நிறுத்தப்படும்: பழனிசாமி உறுதி

​​​​​​​அடுத்து அமையும் அதிமுக ஆட்சியில் இரும்புக் கரம் கொண்டு குற்றங்கள் தடுத்து நிறுத்தப்படும்: பழனிசாமி உறுதி
​​​​​​​அடுத்து அமையும் அதிமுக ஆட்சியில் இரும்புக் கரம் கொண்டு குற்றங்கள் தடுத்து நிறுத்தப்படும்: பழனிசாமி உறுதி

தூத்துக்குடி: தமிழகத்​தில் சட்​டம்​-ஒழுங்கு சீர்​குலைந்​து​விட்​டது. அடுத்து அமை​யும் அதி​முக ஆட்​சி​யில் இரும்​புக் கரம் கொண்டு குற்​றங்​கள் தடுக்​கப்​படும் என்று எதிர்க்​கட்​சித் தலை​வரும், அதிமுக பொதுச் செய​லா​ள​ரு​மான பழனி​சாமி கூறி​னார்

தூத்​துக்​குடி​யில் தொழில்​முனை​வோர், விவ​சா​யிகள், உப்புஉற்​பத்​தி​யாளர்​கள், மீனவர்​கள் மற்​றும் வழக்​கறிஞர்​களு​ட​னான கலந்​தாய்​வுக் கூட்​டம் நேற்று நடை​பெற்​றது.

அகில இந்​திய தொழில் வர்த்தக சங்​கம், லாரி உரிமை​யாளர் சங்​கம், நாட்​டுப்​படகு மீனவர் சங்​கம், சிறு வணி​கர் சங்​கம், குரூஸ் பர்​னாந்து மக்​கள் மன்​றம், வழக்​கறிஞர்​கள் சங்​கம், புதி​யம்​புத்​தூர் ஜவுளி வியா​பாரி​கள் சங்​கம், ஸ்பிக் தொழிலா​ளர் நலச்​சங்​கம், வாழை, கடலை விவ​சா​யிகள் சங்​கம், பேய்​குளம் நிலச்​சு​வான்​தார்​கள் விவ​சா​யிகள் அபி​விருத்தி சங்​கம், பெந்​த​கொஸ்தே சபை ஆகிய அமைப்​பு​களை சேர்ந்த நிர்​வாகி​கள் பல்​வேறு கோரிக்​கைகளை முன்​வைத்​துப் பேசினர். தொடர்ந்து பழனி​சாமி பேசி​ய​தாவது: அதி​முக ஆட்​சி​யில் தூத்​துக்​குடி விமான நிலை​யம் அமைக்க 750 ஏக்​கர் நிலம் கையகப்​படுத்த நிதி ஒதுக்​கப்​பட்​டு, பணி​கள் தொடங்​கின. இத்​திட்​டத்​துக்கு நிலம் எடுப்​ப​தற்கு முழு காரணம் அதி​முக அரசு​தான். மீண்​டும் அதி​முக ஆட்சி அமைந்​ததும், தூத்​துக்​குடி​யில் வர்த்தக மையம் அமைக்க நடவடிக்கை எடுக்​கப்​படும். அதே​போல, வி.​வி.டி. சந்திப்பு பகு​தி​யில் பாலம் அமைக்​க​வும், உப்​பளத் தொழிலா​ளர்​களுக்கு நலவாரி​யம் அமைக்​க​வும் நடவடிக்கை எடுக்​கப்​படும்.

குடிம​ராமத்து திட்​டம் மூலம் குளங்​கள் தூர்​வாரப்​படும். தொழில்​கள் தொடங்​கு​வதற்​கான அனு​மதி பெற ஒற்​றைச்​சாளர முறையை மீண்​டும் கொண்​டு​வரு​வோம். அதி​முக ஆட்​சி​யில்​தான் சாலைகள் தரமாக விரி​வாக்​கம் செய்​யப்​பட்​டன. இந்​தி​யா​விலேயே அதிக நீளத்​தில் தார் சாலைகள் கொண்ட மாநிலம் தமிழகம் என்ற சூழலை உருவாக்​கினோம்.

2022 காவல் துறை மானியக் கோரிக்​கை​யின்​போது பள்​ளி, கல்​லூரி அருகே கஞ்சா விற்​பனை செய்​த​தாக 2,348 பேர் கண்​டறியப்​பட்​டு, 140 பேர் கைது செய்​யப்​பட்​ட​தாக தெரி​வித்​தனர். எங்கு பார்த்​தா​லும் போதைப் பொருட்​கள் விற்​பனை நடக்​கிறது. கொலை, கொள்​ளை, திருட்​டு, பாலியல் சீண்​டல் நடப்​ப​தற்கு போதைப் பொருள் பழக்​கமே முக்​கியக் காரணம்.

போலீ​ஸாருக்கு முழு சுதந்​திரம் கொடுத்​தால்​தான் போதைப் பொருட்​கள் புழக்​கத்​தைக் கட்​டுப்​படுத்த முடி​யும். 2021-க்கு முன்பு காவல் துறை எப்​படி செயல்​பட்​டு, தற்​போது எப்​படி செயல்​படு​கிறது? மீண்​டும் அதி​முக ஆட்சி அமை​யும் ​போது, இரும்​புக்​கரம் கொண்டு குற்​றங்​கள் தடுக்​கப்​படும். இவ்​வாறு பழனி​சாமி பேசி​னார்.

பின்​னர், தூத்​துக்​குடி தூய பனிமய மாதா பேரால​யத்​தில் அவர் வழிப்​பட்​டார். அவருக்​கு, தூய பனிமய மாதா படத்தை பங்​குத்​தந்தை ஸ்டார்​வின் ஆசீர் அளித்​தார். முன்​னாள் அமைச்​சர்​கள் கடம்​பூர் செ.​ராஜு, எஸ்​.பி.சண்​முக​நாதன் உள்​ளிட்​டோர் பங்​கேற்​றனர்.