வருகிற 15, 17-ந்தேதிகளில் சென்ட்ரல்-கும்மிடிப்பூண்டி இடையே 25 மின்சார ரெயில்கள் ரத்து

வருகிற 15, 17-ந்தேதிகளில் சென்ட்ரல்-கும்மிடிப்பூண்டி இடையே 25 மின்சார ரெயில்கள் ரத்து
வருகிற 15, 17-ந்தேதிகளில் சென்ட்ரல்-கும்மிடிப்பூண்டி

கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு காலை 9.10, 9.55, மதியம் 12, 1, 2.30 மணிக்கு செல்லும் ரெயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.

கும்மிடிப்பூண்டியில் இருந்து தாம்பரத்துக்கு மாலை 3 மணிக்கு புறப்படும் ரெயில் சென்னை கடற்கரையில் இருந்து இயக்கப்பட உள்ளன.

சென்னை:

கும்மிடிப்பூண்டி - பொன்னேரி ரெயில் நிலையங்களுக்கு இடையே வருகிற 15 மற்றும் 17-ந்தேதிகளில் காலை 9.15 மணி முதல் பிற்பகல் 3.15 மணி வரை ரெயில் பாதை மேம்பாட்டு பணிகள் நடைபெற உள்ளது. இதையொட்டி அந்த 2 நாட்களிலும் 6 மணி நேரத்துக்கு சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் 25 புறநகர் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்ட்ரலில் இருந்து காலை 5.40, 10.15, மதியம் 12.10 மணிக்கு சூலூல்பேட்டைக்கு செல்லும் ரெயில்கள் ரத்து செய்யப்படுகின்றன. சூலூர்பேட்டை - நெல்லூர் இடையே காலை 7.50 மணிக்கு செல்லும் ரெயில் ரத்து செய்யப்படுகிறது. சென்ட்ரலில் இருந்து கும்மிடிப்பூண்டிக்கு காலை 8.05, 9, 9.30, 10.30, 11.35 மணிக்கு செல்லும் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகின்றன. சென்ட்ரலில் இருந்து சூலூர்பேட்டைக்கு காலை 8.35 மணிக்கு செல்லும் ரெயில், சென்னை கடற்கரையில் இருந்து கும்மிடிப்பூண்டிக்கு காலை 9.40, 12.40 மணிக்கு செல்லும் ரெயில்கள் ரத்து செய்யப்படுகின்றன. ஆவடியில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு அதிகாலை 4.25 மணிக்கு செல்லும் ரெயில், கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு காலை 9.10, 9.55, மதியம் 12, 1, 2.30 மணிக்கு செல்லும் ரெயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.

சூலூர்பேட்டையில் இருந்து சென்ட்ரலுக்கு காலை 10, 11.45, மதியம் 12.35, 1.15 மணிக்கு செல்லும் ரெயில்கள் ரத்து செய்யப்படுகின்றன. கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை கடற்கரைக்கு காலை 10.55, 11.25 மணிக்கு செல்லும் ரெயில்கள், நெல்லூரில் இருந்து சூலூர்பேட்டைக்கு காலை 10.20 மணிக்கு செல்லும் ரெயில்கள் ஆகியவை ரத்து செய்யப்படுகின்றன.

செங்கல்பட்டில் இருந்து கும்மிடிப்பூண்டிக்கு காலை 9.55 மணிக்கு புறப்படும் ரெயில் சென்னை கடற்கரை வரையிலும், கும்மிடிப்பூண்டியில் இருந்து தாம்பரத்துக்கு மாலை 3 மணிக்கு புறப்படும் ரெயில் சென்னை கடற்கரையில் இருந்து இயக்கப்பட உள்ளன. இந்த தகவலை சென்னை ரெயில் கோட்டம் தெரிவித்து உள்ளது.

சென்னை சென்ட்ரலில் இருந்து பொன்னேரிக்கு காலை 8.05, 9, 9.30 மணிக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும். சென்ட்ரலில் இருந்து மீஞ்சூருக்கு காலை 9.40, 11.35 மணிக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படும். சென்ட்ரலில் இருந்து எண்ணூருக்கு காலை 10.30 மணிக்கும், சென்னை கடற்கரையில் இருந்து மீஞ்சூருக்கு மதியம் 12.40 மணிக்கும் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும். பொன்னேரியில் இருந்து சென்ட்ரலுக்கு காலை 9.27, 10.13 மணிக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும். பொன்னேரியில் இருந்து சென்னை கடற்கரைக்கு காலை 11.13 மணிக்கும், மீஞ்சூரில் இருந்து சென்ட்ரலுக்கு காலை 11.56, மதியம் 1.43, 2.59 மணிக்கும், எண்ணூரில் இருந்து சென்ட்ரலுக்கு மதியம் 12.43 மணிக்கும் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளன