கிடுகிடுவென எகிறி வரும் தக்காளி விலை.. இன்னும் உயருமாம்.. காரணம் சொன்ன கோயம்பேடு காய்கறி வியாபாரி!

கிடுகிடுவென எகிறி வரும் தக்காளி விலை.. இன்னும் உயருமாம்.. காரணம் சொன்ன கோயம்பேடு காய்கறி வியாபாரி!
சென்னை: கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. மொத்த விற்பனையில் கடந்த வாரம் தக்காளி கிலோ ரூ.20க்கு விற்பனையான நிலையில், தற்போது ரூ.50க்கு விற்பனை ஆகிறது. கோயம்பேட்டில் உள்ள சில்லறை விற்பனை கடைகளில் தக்காளி கிலோ ரூ.60 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

தமிழகத்தில் உள்ள உழவர் சந்தைகள் மற்றும் காய்கறி அங்காடிகளுக்குத் தருமபுரி, சேலம், கிருஷ்ணகிரி ஆகிய உள்ளூர் மாவட்டங்களிலும், வெளி மாநிலங்களிலிருந்தும் தக்காளி விற்பனைக்கு வருகிறது.

சென்னை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்கள் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகள், ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்தும் காய்கறிகள் கோயம்பேடு சந்தைக்கு லாரிகளில் வந்து இறங்குகின்றன. இங்கிருந்து சில்லறை வியாபாரிகள் வாங்கிச் சென்று கடைகளில் விற்பனை செய்து வருகிறார்கள்.

கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. மொத்த விற்பனையில் கடந்த வாரம் தக்காளி கிலோ ரூ.20க்கு விற்பனையான நிலையில், தற்போது ரூ.50க்கு விற்பனை ஆகிறது. கோயம்பேட்டில் உள்ள சில்லறை விற்பனை கடைகளில் தக்காளி கிலோ ரூ.60 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

கடந்த மாதம் வரை தக்காளியின் வரத்து அதிகரித்துக் காணப்பட்டதால் விலை சரிந்து ஒரு கிலோ 10 முதல் 15 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. கடந்த வாரம் வரை தக்காளி ஒரு கிலோ ரூ.20 என்ற அளவில் விற்பனை ஆனது.

தற்போது பருவநிலை மாற்றத்தால் தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடக மாநிலங்களிலும் தக்காளியின் வரத்து சரிந்து விலை 3 மடங்கு அதிகரித்துள்ளது. ஒரு கிலோ 50 முதல் 70 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தக்காளியின் விலை மேலும் உயரக்கூடும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.