சுற்றுலா செல்ல அரசுப் பேருந்துகளை ஒப்பந்தம் செய்வது எப்படி?

தமிழக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம், சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் பேருந்துகளை குறைந்த வாடகையில் ஒப்பந்தம் செய்வது குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
தமிழகத்துக்குள் சுற்றுலா, திருமணம் போன்ற முன்பே திட்டமிட்ட நிகழ்வுகளுக்குச் செல்பவர்கள் ரயில், விமானம் போன்ற போக்குவரத்தில் செல்லும் பட்சத்தில் ரயில் நிலையங்களில் இருந்து சென்றுசேர வேண்டிய இடத்துக்கு மற்றொரு போக்குவரத்தை நாட வேண்டிய அவசியம் ஏற்படும்.
அதனால், சில பயணங்களுக்கு குடும்பத்துடன் செல்வதற்கு வேன் அல்லது பேருந்தை முன்பே புக் செய்து பலரும் பயணம் மேற்கொள்வது வழக்கம்.
இந்த நிலையில், சுற்றுலா அல்லது சுற்றுப் பயணங்கள், திருமணங்கள், பள்ளி / கல்லூரி படிப்பு சுற்றுலா / குடும்ப உறவினர்களுடன் அல்லது நண்பர்களுடன் உல்லாசப் பயணம் போன்ற நோக்கங்களுக்காக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மற்றும் சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் சார்பில் பேருந்துகள் ஒப்பந்த முறையில் வாடகைக்கு வழங்கப்படுகிறது.
நேரத்தில் அதிகபட்சமாக 100 கி.மீ. பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்படுகிறது. ஒரு கி.மீ. ரூ. 55 வசூலிக்கப்படுகிறது. இரவு நேரம் என்றால் கூடுதலாக 25 சதவிகிதம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
பள்ளி மாணவர்கள் அல்லது தனியார் நிகழ்ச்சிகளுக்கு எல்எஸ்எஸ் கட்டணம் வசூலிக்கப்படும். குறைந்தபட்சம் 73 பேருக்கு சென்றுவர இருவழித்தட கட்டணம் வசூலிக்கப்படும். கூடுதலாக ஜிஎஸ்டி விதிக்கப்படும்.
முன்பணமாக ரூ. 200 வசூலிக்கப்படும். அனைத்து கட்டணமும் டிடி மூலமாக போக்குவரத்து கழகத்துக்கு வழங்க வேண்டும்.
பயணத்தின் போது பேருந்தில் சேதம் ஏற்பட்டால், அதற்கான அபராதம் வசூலிக்கப்படும்.
கூடுதல் விவரங்களுக்கு 044-23455858, 044-23455859,
8778065779, 94450 30515 என்ற எண்களில் போக்குவரத்துக் கழக அதிகாரிகளைத் தொடர்பு கொள்ளலாம்....