திடக்கழிவு மேலாண்மையில் ஒருங்கிணைந்த கட்டமைப்பை உருவாக்க சென்னை ஐஐடியுடன் தூய்மை தமிழ்நாடு ஒப்பந்தம்

திடக்கழிவு மேலாண்மையில் ஒருங்கிணைந்த கட்டமைப்பை உருவாக்க சென்னை ஐஐடியுடன் தூய்மை தமிழ்நாடு ஒப்பந்தம்
திடக்கழிவு மேலாண்மையில் ஒருங்கிணைந்த கட்டமைப்பை உருவாக்க சென்னை ஐஐடியுடன் தூய்மை தமிழ்நாடு ஒப்பந்தம்

சென்னை: தமிழகத்​தில் திடக்​கழிவு மேலாண்​மை​யில் ஒருங்​கிணைந்த கட்​டமைப்பை உரு​வாக்​கு​வதற்​காக தூய்மை தமிழ்​நாடு நிறு​வனம் மற்​றும் சென்னை ஐஐடி இடை​யே முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் முன்​னிலை​யில் ஒப்​பந்​தம் மேற்​கொள்​ளப்​பட்​டது.

இதுகுறித்து தமிழக அரசு வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: தமிழக அரசு மேற்​கொண்டு வரும் பல்​வேறு முன்​னெடுப்​பு​களில் தற்​போது தமிழகத்​தில் உள்ள நகர்ப்​புற மற்​றும் ஊரகப் பகு​தி​களில் தினந்​தோறும் உரு​வாகும் திடக்​கழி​வு​களை மேலாண்மை செய்​வ​தில் ஒரு புரட்​சியை ஏற்​படுத்​தும் நோக்​கில் தூய்மை இயக்​கம் என்ற ஒருங்​கிணைந்த அமைப்பு சிறப்​புத் திட்​டச் செய​லாக்​கத் துறை​யின்​கீழ் ஏற்​படுத்​தப்​பட்​டுள்​ளது.

நவீன தொழில்நுட்பம்: இந்த இயக்​கத்தை செயல்​படுத்த தூய்மை தமிழ்​நாடு நிறு​வனம் என்ற அமைப்பு செயல்​பாட்​டுக்கு கொண்டு வரப்​பட்​டுள்​ளது. தூய்மை இயக்​கத்​தின்​கீழ் உள்​ளாட்சி அமைப்​பு​களின் மூலம் மாநிலத்​துக்​கான நிலை​யான கழிவு மேலாண்மை தீர்​வு​களுக்​கான நடவடிக்​கைகளை தூய்மை தமிழ்​நாடு நிறு​வனம் மேற்​கொண்டு வரு​கிறது.

அதன் ஒருபகு​தி​யாக, தூய்மை தமிழ்​நாடு நிறு​வனம் மாநிலம் முழு​வதும் உரு​வாகும் திடக்​கழி​வு​களை அறி​வியல்​பூர்​வ​மாக நவீன தொழில் நுட்​பத்​தைப் பயன்​படுத்தி சரி​யான முறை​யில் கையாள​வும் அவற்றை மறுசுழற்சி செய்​ய​வும் ஒரு வலு​வான ஒருங்​கிணைந்த கட்​டமைப்பை உரு​வாக்க சென்னை - ஐஐடி​யுடன் இணைந்து செயல்​பட​வுள்​ளது.

அதன் ஒருபகு​தி​யாக, தூய்மை தமிழ்​நாடு நிறு​வனம் மாநிலம் முழு​வதும் உரு​வாகும் திடக்​கழி​வு​களை அறி​வியல்​பூர்​வ​மாக நவீன தொழில் நுட்​பத்​தைப் பயன்​படுத்தி சரி​யான முறை​யில் கையாள​வும் அவற்றை மறுசுழற்சி செய்​ய​வும் ஒரு வலு​வான ஒருங்​கிணைந்த கட்​டமைப்பை உரு​வாக்க சென்னை - ஐஐடி​யுடன் இணைந்து செயல்​பட​வுள்​ளது.

இதற்​காக, தூய்மை தமிழ்​நாடு நிறு​வனத்​தின் (CTCL) நிர்​வாக இயக்​குநர் மற்​றும் சென்​னை ஐஐடி இயக்குநருடன் புரிந்துணர்வு ஒப்​பந்​தம் தலை​மைச் செயல​கத்​தில் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் முன்​னிலை​யில் நேற்று கையெழுத்​தானது.

ஐக்​கிய நாடு​களின் நீடித்த நிலையான வளர்ச்சி இலக்​கு​களை அடைய​வும், மாநிலத்​தில் திடக்​கழிவு மேலாண்​மை​யில் எதிர்​கொள்​ளப்​பட்டு வரும் சவால்​களை களை​ய​வும் உயர் தொழில்​நுட்​பத்​தின் மூலம் சுற்​றுச்​சூழல் விதி​முறை​களுக்கு உட்​பட்டு மீள்​பயன்​பாடு மற்​றும் மறுசுழற்சி செய்​வதற்​கான நடவடிக்​கைகளை மேற்​கொள்​ள​வும் இந்த புரிந்​துணர்வு ஒப்​பந்​தம் வழி​வகை செய்​யும்.

இந்நிகழ்ச்​சி​யில், துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின், தலை​மைச்​செயலர் நா.​முரு​கானந்​தம், சிறப்பு திட்​டச் செய​லாக்​கத் துறை செயலர் பிரதீப் யாதவ், தூய்மை தமிழ்​நாடு நிறு​வனத்​தின் நிர்​வாக இயக்​குநர் எஸ்​.உ​மா, ஐஐடி சென்னை இயக்​குநர் காமகோடி உள்​ளிட்​டோர் பங்​கேற்​றனர்.