மென்பொருள் ஏற்றுமதியில் தமிழகம் 3-வது இடம்: உதயநிதி பெருமிதம்

மென்பொருள் ஏற்றுமதியில் தமிழகம் 3-வது இடம்: உதயநிதி பெருமிதம்
சென்னையில் நேற்று நடைபெற்ற முதலாவது அறிவுசார் சொத்துரிமை மாநாட்டில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் 6 முன்னணி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், செயலர் பிரஜேந்திர நவ்னித், எல்காட் நிறுவன மேலாண்மை இயக்குநர் கார்த்திகேயன், ஐடிஎன்டி தலைமை நிர்வாக அதிகாரி வனிதா வேணுகோபால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சென்னை: சென்​னை​யில் நடந்த முதலா​வது அறி​வு​சார் சொத்​துரிமை மாநாட்டை தொடங்கி வைத்த துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின், இந்​தி​யா​வில் 3-வது பெரிய மென்​பொருள் ஏற்​றும​தி​யாள​ராக தமிழகம் திகழ்​வ​தாக தெரி​வித்​தார். இந்த மாநாட்​டில் 6 முன்​னணி நிறு​வனங்​களு​டன் ஒப்​பந்​தம் மேற்​கொள்​ளப்​பட்​டது.

தமிழக அரசின் தகவல் தொழில்​நுட்​பத் துறை​யின்​கீழ் செயல்​பட்டு வரும் தமிழ்​நாடு தொழில்​நுட்ப மையம் (ஐடிஎன்​டி) சார்​பில் முதலா​வது அறி​வு​சார் சொத்​துரிமை மாநாடு சென்னை கோட்​டூர்​புரத்​தில் நேற்று நடை​பெற்​றது.

அறி​வு​சார் மையம் மூலம் தமிழகத்தை இந்​தி​யா​வின் புது​மை​யின் தலைநகர​மாக மாற்​று​தல்’ என்ற தலைப்​பில் நடந்த மாநாட்டை துணை முதல்​வர் உதயநிதி தொடங்கி வைத்து தொழில்​நுட்ப கண்​காட்​சியை பார்​வை​யிட்​டார். தகவல் தொழில்​நுட்​பத் துறை அமைச்​சர் பழனிவேல் தியாக​ராஜன் முன்​னிலை வகித்​தார்.

இந்த மாநாட்​டில் டீப்​-டெக் தொழில்​நுட்​பம், ஸ்டார்ட்​அப் நிறு​வனங்​கள் மற்​றும் ஆராய்ச்​சி​யாளர்​களுக்கு ஆதரவு அளிக்​கும் வகையில் தேசிய ஆராய்ச்சி மேம்​பாட்டு நிறு​வனம், மகேந்​தி​ரா, போஷ் உள்​ளிட்ட 6 முன்​னணி நிறு​வனங்​களு​டன் புரிந்​துணர்வு ஒப்​பந்​தம் கையெழுத்​தானது.

அதைத்​தொடர்ந்து தமிழ்​நாடு தொழில்​நுட்ப பரி​மாற்ற வசதி மையம் மூலம் ஆராய்ச்​சி​யாளர்​களுக்கு உதவும் வகை​யில் 4 முன்னணி சட்ட நிறு​வனங்​களிடம் சட்​டப்​பூர்வ பங்​கு​தா​ரர்​களின் விருப்​பக் கடிதங்​களும் பரி​மாற்​றம் செய்​யப்​பட்​டன.

இதையடுத்து செயற்கை நுண்​ணறிவு (ஏஐ), ரோபோட்​டிக்​ஸ், தொழில்​நுட்ப மருத்​து​வம், விண்​வெளி தொழில்​நுட்​பம், சைபர் பாதுகாப்​பு, குவாண்​டம் தொழில்​நுட்​பம் போன்ற வளர்ந்து வரும் தொழில்​நுட்​பத்​தில் உள்​வளர்ச்சி பெற்ற 5 ஸ்டார்ட்​அப் நிறு​வனங்களுக்கு ஐடிஎன்டி மையத்​தின் ஃபவுண்​டேஷன் நிதி​யின் கீழ் காசோலைகளை துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின் வழங்கினார்.

பின்​னர் அவர் பேசி​ய​தாவது: திரா​விட இயக்​கம் எப்​போதும் புதிய தொழில்​நுட்​பங்​களை ஊக்​குவிக்​கும். அந்​தவகை​யில் ஒவ்​வொரு முறை திமுக ஆட்​சிக்கு வரும்​போதும் வளர்ந்து வரும் தொழில்​நுட்​பங்​கள் சமூகத்​தின் ஒவ்​வொரு பிரிவை​யும் சென்​றடைவது உறு​தி​செய்​யப்​படும்.

அந்​தவகை​யில் முதல்​வர் ஸ்டா​லின் தலை​மை​யில் ஐடி துறை​யில் தமிழகம் பல்​வேறு புதிய சாதனை​களை எட்​டி​யிருக்​கிறது. கடந்த 4 ஆண்​டு​களில் தமிழகம், இந்​தி​யா​வில் 3-வது பெரிய மென்​பொருள் ஏற்​றும​தி​யாள​ராக மாறி​யிருக்​கிறது. சென்னை மென்​பொருள் சேவை​யின் தலைநகர​மாக அழைக்​கப்​பட்டு வரு​கிறது.

அதே​போல் முன்​னணி ஐடி நிறு​வனங்​கள் கோவை, மதுரை போன்ற இரண்​டாம் கட்ட நகரங்​களுக்​கும் தங்​களை விரிவுபடுத்தி வரு​கின்​றன. ஐடி துறை​யுடன் இணைந்து நான் முதல்​வர் திட்​டம் மூலம் மாணவர்​களுக்கு திறன் பயிற்​சிகள் வழங்​கப்​படு​கின்​றன. டிஜிட்​டல் அணுகலை வலுப்​படுத்த சென்​னை, தாம்​பரம், ஆவடி மற்​றும் கோவை மாநக​ராட்​சிக்​குட்​பட்ட பகு​தி​களில் 2 ஆயிரம் இடங்​களில் வைஃபை கருவி​கள் நிறு​வப்​பட்​டுள்​ளன. இவ்​வாறு பேசி​னார்.

இந்​நிகழ்​வில் தகவல் தொழில்​நுட்​பத் துறை செயலர் பிரஜேந்​திர நவ்​னித், எல்​காட் நிறு​வனத்​தின் மேலாண்மை இயக்​குநர் கார்த்தி​கேயன், ஐடிஎன்டி மையத்​தின் தலைமை நிர்​வாக அதி​காரி வனிதா வேணுகோ​பால், சென்னை ஐஐடி ஆராய்ச்சி பூங்காவின் தலைமை நிர்​வாக அதி​காரி நாட் மலுப்​பிள்​ளை, மாநில திட்​டக்​குழு​வின் துணைத் தலை​வர் ஜெயரஞ்​சன், தேசிய ஆராய்ச்சி மேம்​பாட்​டுக்​ கழகத்​தின்​ தலை​வர்​ அமித்​ ரஸ்​தோகி உள்​ளிட்​டோர்​ பங்​கேற்​றனர்​.