நரம்பு மண்டலத்தை பலப்படுத்தும் இந்தக் காய்... இப்படி கூட்டு செய்து ருசிங்க!

நரம்பு மண்டலத்தை பலப்படுத்தும் இந்தக் காய்... இப்படி கூட்டு செய்து ருசிங்க!
கொத்தவரங்காய் கொண்டு எவ்வாறு சுவையான கூட்டு செய்யலாம் என்று காணலாம்

கொத்தவரங்காய் கொண்டு எவ்வாறு சுவையான கூட்டு செய்யலாம் என்று காணலாம். இதனை சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிடும் போது டேஸ்டாக இருக்கும். குறிப்பாக, இதில் நிறைய மருத்துவ குணங்களும் உள்ளன.

பொதுவாகவே, காய்கறிகளில் நிறைய மருத்துவ குணங்கள் இருக்கும். குறிப்பாக, கொத்தவரங்காயில் நரம்பு மண்டலத்தை வலிமையாக்கும் ஆற்றல், ஊட்டச்சத்துகள், செரிமான ஆரோக்கியம், எடை மேலாண்மை போன்றவை இடம்பெற்றுள்ளன. அந்த வகையில் கொத்தவரங்காய் கொண்டு சுவையான கூட்டு செய்முறையை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

கொத்தவரங்காய்,

மஞ்சள் தூள்,

உப்பு,

வேர்க்கடலை,

மல்லி விதைகள்,

சீரகம், 

பூண்டு,

தேங்காய்,

காய்ந்த மிளகாய்,

எண்ணெய்,

கடுகு,

உளுத்தம் பருப்பு,

கறிவேப்பிலை,

வெங்காயம்.

செய்முறை:

கொத்தவரங்காயை நன்றாக கழுவி விட்டு, சிறிய துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். இதனை குக்கரில் போட்டு அத்துடன் சிறிது மஞ்சள் தூள், உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து ஒரு விசில் வரும் வரை கொதிக்க விட வேண்டும்.

இதனிடையே, அடுப்பில் கடாய் வைத்து அதில் வேர்க்கடலை, மல்லி விதைகள், சீரகம், பூண்டு, தேங்காய், காய்ந்த மிளகாய் ஆகியவை சேர்த்து பொந்நிறமாக வறுக்க வேண்டும். இவற்றை மிக்ஸியில் கொரகொரப்பாக அரைக்கலாம்.

இப்போது, அடுப்பில் இருக்கும் கடாயில் இரண்டு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, நறுக்கிய வெங்காயம், உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து வதக்க வேண்டும். இனி, வேக வைத்த கொத்தவரங்காய், அரைத்த மசாலா சேர்த்து கிளறி இறக்கினால் சுவையான கூட்டு தயாராகி விடும்