சுதந்திர தினத்தையொட்டி மூவர்ண கொடி யாத்திரை: பாஜகவில் ஒருங்கிணைப்புக் குழு நியமனம்

சுதந்திர தினத்தையொட்டி மூவர்ண கொடி யாத்திரை: பாஜகவில் ஒருங்கிணைப்புக் குழு நியமனம்
சுதந்திர தினத்தையொட்டி மூவர்ண கொடி யாத்திரை: பாஜகவில் ஒருங்கிணைப்புக் குழு நியமனம்

சென்னை: சுதந்​திர தினத்​தையொட்டி மூவர்​ணக் கொடி யாத்​திரை மற்​றும் இதர பணி​களை ஒருங்​கிணைக்க தமிழக பாஜக​வில் மாநில அளவி​லான குழுவை நயி​னார் நாகேந்​திரன் நியமித்​துள்​ளார்.

இதுகுறித்து அவர் வெளி​ யிட்​டுள்ள அறிவிப்பில் கூறி​யிருப்​ப​தாவது: இந்​தாண்டு சுதந்​திர தினத்​தையொட்டி பல்​வேறு நிகழ்ச்​சிகள் நடத்த பாஜக தேசிய தலை​வர் ஜெ.பி.நட்டா அறி​வுறுத்​தி​யுள்​ளார். அதன்​படி, திரங்கா (மூவர்ண கொடி) யாத்​திரை, வீடு​தோறும் தேசி​யக் கொடி ஏற்​று​தல் மற்​றும் தூய்​மைப் பணி​களை மேற்​கொள்​ளுதல் என பல்​வேறு நிகழ்ச்​சிகள் ஆக.10-ம் தேதி முதல் நடத்த அறி​வுறுத்​தப்​பட்​டுள்​ளது.

தமிழகத்​தில் மூவர்​ணக் கொடி யாத்திரை உள்​ ளிட்ட பணி​களை ஒருங்​கி ணைக்​க​வும், வழி நடத்​த​ வும் மாநில பொதுச் செய​லா​ளர் ஏ.பி.​முரு​கானந்​தம் தலை​மை​யில் குழு அமைக்​கப்​பட்​டுள்​ளது. அந்த குழு​வில், மாநிலச் செய​லா​ளர் அமர்​பிர​சாத் ரெட்​டி, இளைஞர் அணி தலை​வர் எஸ்​.ஜி.சூர்​யா, மகளிர் அணி தலை​வர் கவிதா ​காந்த், ஓபிசி அணி தலை​வர் வீர திரு​நாவுக்​கரசு, முன்​னாள் மாவட்ட தலை​வர்​கள் சுரேஷ்​பாபு, மகாசுசீந்​திரன், தென்​காசி மாவட்ட அமைப்​பாளர் மகா​ராஜன் ஆகியோர் செயல்​படு​வார்​கள். இவ்​வாறு அதில்​ கூறப்​பட்​டுள்​ளது