பிரதமர் மோடி நாளை இரவு வருகையை முன்னிட்டு தூத்துக்குடி விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு

பிரதமர் மோடி நாளை இரவு வருகையை முன்னிட்டு தூத்துக்குடி விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு
பிரதமர் மோடி நாளை இரவு வருகையை முன்னிட்டு தூத்துக்குடி விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு

தூத்துக்குடி: பிரதமர் மோடி வரு​கையை முன்​னிட்டு தூத்​துக்​குடிக்கு விமான நிலை​யத்தை சுற்றி 5 அடுக்கு பாது​காப்பு ஏற்​பாடு​கள் செய்​யப்​படு​கின்​றன. தூத்​துக்​குடி​யில் விரி​வாக்​கம் செய்​யப்​பட்ட விமான நிலை​யத் திறப்பு விழா மற்​றும் தமிழகத்​தில் மத்​திய அரசு சார்​பில் நிறைவேற்​றப்​பட்ட பல்​வேறு திட்​டப் பணி​கள் தொடக்க விழா தூத்​துக்​குடி விமான நிலைய வளாகத்​தில் நாளை (ஜூலை 26) இரவு 8 மணிக்கு நடை​பெறுகிறது.

இதில் பிரதமர் மோடி கலந்​து​கொண்​டு, விரி​வாக்​கம் செய்​யப்​பட்ட விமான நிலை​யத்தை திறந்​து​வைக்​கிறார். மேலும், பல்​வேறு திட்டப்​பணி​களை திறந்​து​வைத்​து, புதிய பணி​களுக்கு அடிக்​கல் நாட்​டிப் பேசுகிறார்.

இந்த விழா​வில் பங்​கேற்​ப​தற்​காக பிரதமர் மோடி மாலத்​தீ​வில் இருந்து இந்​திய விமானப் படைக்​குச் சொந்​த​மான தனி விமானத்​தில் நாளை இரவு 7.50 மணி​யள​வில் தூத்​துக்​குடி விமான நிலை​யம் வரு​கிறார். விழா முடிந்து இரவு 9.30 மணி​யள​வில் தனி விமானத்​தில் திருச்சி செல்​கிறார். இதையொட்​டி, தூத்​துக்​குடி விமான நிலை​யத்​தில் நேற்று முன்​தினம் இரவு இந்​திய விமான படை விமானத்தை தரை​யிறக்கி சோதனை நடத்​தப்​பட்​டது

மேலும், பிரதமர் பங்​கேற்​கும் விழாவை முன்​னிட்டு பலத்த பாது​காப்பு ஏற்​பாடு​கள் செய்​யப்​பட்​டுள்​ளன. விமான நிலைய வளாகம் முழு​வதும் சிறப்பு பாது​காப்​புப் பிரி​வினர் கட்​டுப்​பாட்​டுக்​குள் கொண்டு வரப்​பட்​டுள்​ளது. ஏடிஜிபி டேவிட்​சன் தேவாசீர்​வாதம் மற்றும் அதி​காரி​கள் பாது​காப்​புப் பணி​களை நேற்று ஆய்வு செய்​தனர்.

அதே​போல, விழா ஏற்​பாடு​களை மாவட்ட ஆட்​சி​யர் க.இளம்​பகவத் மற்​றும் விமான நிலைய அதி​காரி​கள் பார்​வை​யிட்​டனர். இன்று (ஜூலை 25) முதல் 2 ஆயிரம் போலீ​ஸார் பாது​காப்​புப் பணி​யில் ஈடு​படுத்​தப்​பட்​டு, 5 அடுக்​கு பாது​காப்​பு ஏற்​பாடு​கள்​ செய்யப்படுகின்​றன.