மின் வாரியத்தில் அப்ரண்டீஸ் பயிற்சி முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்க கோரி ஆர்ப்பாட்டம்

மின் வாரியத்தில் அப்ரண்டீஸ் பயிற்சி முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்க கோரி ஆர்ப்பாட்டம்
மின் வாரியத்தில் அப்ரண்டீஸ் பயிற்சி முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்கக் கோரி, தமிழ்நாடு மின்சார வாரிய அப்ரண்டீஸ் தொழிற்சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது

சென்னை: மின்​வாரி​யத்​தில் அப்​ரண்​டீஸ் பயிற்சி முடித்​தவர்​களுக்கு வேலை​வாய்ப்​பில் இட ஒதுக்​கீடு வழங்​கக்​கோரி, சென்​னை​யில் நேற்று ஆர்ப்​பாட்​டம் நடை​பெற்​றது. மின்​வாரி​யத்​தில் அப்​ரண்​டீஸ் பயிற்சி முடித்​தவர்​களுக்கு வேலை​வாய்ப்​பில் இட ஒதுக்​கீடு வழங்​கக்​கோரி, தமிழ்​நாடு மின்​வாரிய அப்​ரண்​டீஸ் தொழிற்​சங்​கம் சார்​பில், கவன ஈர்ப்பு ஆர்ப்​பாட்​டம் சென்னை எழும்​பூரில் நேற்று நடை​பெற்​றது.

இந்த ஆர்ப்​பாட்​டத்​துக்​கு, தொழிற்​சங்​கத்​தின் தலை​வர் டி.மகேந்​திரன் தலைமை வகித்​தார். ஆர்ப்​பாட்​டம் குறித்​து, செய்​தி​யாளர்​களிடம் பொதுச்​செய​லா​ளர் நந்​தகு​மார் கூறிய​தாவது: தமிழக மின்​வாரி​யத்​தில் கள ஊழியர்​களுக்​கான 32 ஆயிரம் காலிப் பணி​யிடங்​கள் நிரப்​பப்​ப​டா​மல் உள்​ளன. இதையொட்​டி, மின்​வாரி​யத்​தில் பயிற்சி முடித்த டிப்​ளமோ மற்​றும் பி.இ. மாணவர்​களுக்கு டிஎன்​பிஎஸ்சி மூல​மாக​வும், ஐடிஐ முடித்​தவர்​களுக்கு மின்​வாரி​யம் மூல​மாக​வும் தேர்​வு​கள் நடத்​தவுள்​ள​தாக தகவல்​கள் வெளி​யாகி உள்​ளன. யார் தேர்வு நடத்​தி​னாலும் சரி, மின்​வாரி​யத்​தில் பயிற்சி முடித்​தவர்​களுக்கு இட ஒதுக்​கீடு வழங்​கப்பட வேண்​டும்.

ரயில்வே துறை​யில் அப்​ரண்​டீஸ் பயிற்சி முடித்​தவர்​களுக்கு மத்​திய அரசு 20 சதவீத இட ஒதுக்​கீடு வழங்கி நேரடி பணி நியமனம் செய்​துள்​ளது. அதே​போல், திறன் மேம்​பாட்​டுத் துறை​யின் மூலம் அப்​ரண்​டீஸ் பயிற்சி முடித்​தவர்​களுக்கு 70 சதவீத இட ஒதுக்​கீடு வழங்க தமிழக அரசும் ஆணை பிறப்​பித்​துள்​ளது. ஆனால், இதை மின்​வாரி​யம் நடை​முறைப்​படுத்​தாமல் தொடர்ந்து தவிர்த்து வரு​கிறது.

இதனால், மின்​வாரி​யத்​தில் பயிற்சி முடித்​தவர்​களின் நிலைமை கேள்விக் குறி​யாகி இருக்​கும் நிலை​யில், ஐடிஐக்​களில் பயிலும் மாணவர்​களின் எண்​ணிக்​கை​யும் குறைந்து வரு​கிறது. அரசு துறை சார்ந்த நிறு​வனங்​களில் பயிற்சி முடிப்​பவர்​களுக்கு வேலை​வாய்ப்​புக்​கான இட ஒதுக்​கீடு வழங்​கப்​பட்​டால் தான் ஐடிஐ, டிப்​ளமோக்​களில் மாணவர்​களின் எண்​ணிக்கை உயரும். எனவே, தமிழக முதல்​வர் இதில் தனிக் கவனம் செலுத்​தி, மின் ​வாரி​யத்​தில் பயிற்சி முடித்​தவர்​களுக்கு வேலை​வாய்ப்​பில் இட ஒதுக்​கீடு அளிக்க தகுந்த நடவடிக்​கையை எடுக்​கவேண்​டும்​. இவ்​வாறு அவர்​ கூறி​னார்.