மஹிந்திரா நிறுவனம் தயாரிக்கவுள்ள Rare Earth Magnets - சீனாவிற்கு எதிரான இந்தியாவின் தற்சார்பு முயற்சி

இந்தியாவின் எலக்ட்ரிக் வாகனத் துறையில் ஒரு புதிய பரிணாமம் உருவாகியுள்ளது.
ஆனந்த் மஹிந்திரா தலைமையிலான Mahindra & Mahindra நிறுவனம், Uno Minda என்ற இந்திய ஆட்டோ உதிரிபாக தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து, இந்தியாவில் Rare Earth Magnets தயாரிக்க திட்டமிட்டுள்ளது.
இது வரை இந்தியா இதற்கு பெருமளவில் சீனாவை சார்ந்திருந்தது. இதன் மூலம் சீனாவிற்கு எதிரான இந்தியாவின் தற்சார்பு முயற்சி வலுப்பெறும்.
தற்போதைய சூழல்:
சீனா உலகின் 90% Rare Earth Magnet-களை வழங்கும் நிலையில், 2025 ஏப்ரலில் அவற்றின் ஏற்றுமதியை தற்காலிகமாக தடை செய்தது.
இது உலக சந்தையில் பெரும் அதிர்வலை எழுப்பியது. இந்தியா தற்போது அதற்கான மாற்றுதாரத்தை தேடுகிறது.
மஹிந்திரா - Uno Minda கூட்டணியின் முக்கியத்துவம்:
மஹிந்திரா நிறுவனம் தனது புதிய எலக்ட்ரிக் SUV வாகனங்களுக்கான நிலையான விநியோக அமைப்பை உருவாக்க விரும்புகிறது. இதற்காக, மேக்னெட் தயாரிப்பில் நுழைய Uno Minda-வுடன் நீண்டகால ஒப்பந்தத்தை முன்வைத்துள்ளது
Rare Earth Magnet-களின் தேவையென்ன?
இவை எலக்ட்ரிக் மோட்டார்கள், ஸ்மார்ட்போன்கள், கணினிகள், MRI மெஷின்கள், பாதுகாப்பு உபகரணங்கள் என பல முக்கிய தொழில்நுட்பங்களில் பரவலாக பயன்படுத்தப்படுகின்றன.
எப்போது உற்பத்தி தொடங்கும்?
அரசு தகவலின்படி, ஓரிரு ஆண்டுகளில் உற்பத்தி ஆரம்பிக்க வாய்ப்பு உள்ளது. அரசின் ஊக்கத் திட்டங்கள் மற்றும் சலுகைகள் மூலம் இந்தத் துறையில் முதலீடு ஊக்குவிக்க நடவடிக்கைகள் தீவிரமாக நடக்கின்றன.