கட்டுக்கட்டாக பணம் எரிந்து சாம்பலான விவகாரம்: நீதிபதி யஷ்வந்த் வர்மாவுக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

கட்டுக்கட்டாக பணம் எரிந்து சாம்பலான விவகாரம்: நீதிபதி யஷ்வந்த் வர்மாவுக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி
கட்டுக்கட்டாக பணம் எரிந்து சாம்பலான விவகாரம்: நீதிபதி யஷ்வந்த் வர்மாவுக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

புதுடெல்லி: வீட்​டில் கட்​டுக்​கட்​டாக பணம் எரிந்து சாம்​பலான விவ​காரத்​தில் உயர் நீதி​மன்ற நீதிபதி யஷ்வந்த் வர்​மா​விடம் உச்ச நீதி​மன்​றம் சரமாரி​யாகக் கேள்வி​களை எழுப்​பியது. டெல்லி உயர் நீதி​மன்ற நீதிப​தி​யாக இருந்​தவர் யஷ்வந்த் வர்​மா. இவரது வீட்டில் கடந்த மார்ச் மாதம் திடீரென தீப்​பற்​றிய​போது. ஓர் அறை​யில் பல மூட்​டைகளில் கட்​டுக்​கட்​டாக பணம் எரிந்து சாம்​பலாகி கிடப்​பது தெரிய​வந்​தது. இதையடுத்து நீதிபதி வர்​மா​வின் நேர்மை குறித்து சர்ச்சை எழுந்​தது.

இதையடுத்து அவர் அலகா​பாத் உயர் நீதி​மன்​றத்​துக்கு மாற்​றப்​பட்​டார். மேலும், நீதிபதி யஷ்வந்த் வர்​மாவை பதவி​யில் இருந்து நீக்க உச்ச நீதி​மன்ற தலைமை நீதிபதி சஞ்​சீவ் கன்னா நாடாளு​மன்​றத்​துக்கு பரிந்​துரைத்​தார். இதுதொடர்​பாக விசா​ரிக்க தலைமை நீதிபதி சஞ்​சீவ் கன்னா 3 நீதிப​தி​கள் கொண்ட உள் விசா​ரணைக் குழுவை அமைத்தார்.

இதற்​கிடை​யில், நீதிபதி வர்மா உச்ச நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடுத்​துள்​ளார். இந்த வழக்கு நிலு​வை​யில் இருந்தது. இந்த வழக்கு நேற்று நீதிப​தி​கள் தீபாங்​கர் தத்​தா, ஏ.ஜி.​மாசி ஆகியோர் முன்​னிலை​யில் விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது நீதிபதி யஷ்வந்த் வர்மா சார்​பில் மூத்த வழக்​கறிஞர் கபில் சிபல் ஆஜரா​னார்.

அவர் வாதிடும்​போது, “அரசி​யலமைப்பு சட்​டத்​தின் 124-வது பிரி​வின்​படி மட்​டுமே ஒரு நீதிப​தியை பதவியி​லிருந்து நீக்க முடி​யும். 3 நீதிப​தி​கள் அடங்​கிய உள் விசா​ரணைக் குழு​வின் அறிக்​கை​யின் அடிப்​படை​யில் பொது விவாதங்​கள் மூலம் நீதிப​தியை பதவிநீக்க முடி​யாது. மேலும் நீதி​மன்​றத்​தால் அமைக்​கப்​பட்ட உள் விசா​ரணை குழு உரிய நடை​முறை​களைப் பின்​பற்​ற​வில்​லை” என்​றார்.

இதையடுத்து நீதிப​தி​கள் கூறும்​போது, “அப்​படி​யா​னால் விசா​ரணைக் குழு​வின் முன் நீங்​கள் (நீ​திபதி யஷ்வந்த் வர்​மா) ஏன் ஆஜரானீர்​கள்? வீடியோவை நீக்​கு​வதற்​காக நீதி​மன்​றத்​துக்கு வந்​தீர்​களா? விசா​ரணை முடிந்து அறிக்கை வெளி​யிடப்​படும் வரை ஏன் காத்​திருந்​தீர்​கள்? முதலில் அங்​கிருந்து சாதக​மான உத்​தரவை பெறு​வதற்​கான வாய்ப்​பைப் பயன்​படுத்​திக் கொண்​டீர்​களா? குழு நியமிக்​கப்​பட்ட போதே அதை ஏன் நீங்​கள் எதிர்க்​க​வில்​லை” என்று கேள்வி​களை அடுக்​கினர்.

இதைத் தொடர்ந்து 3 நீதிப​தி​கள் அடங்​கிய உள் ​வி​சா​ரணை குழு​வின் அறிக்​கையை தாக்​கல் செய்​யு​மாறு கபில் சிபலுக்கு உத்​தர​விட்ட நீதிப​தி​கள் வழக்கு விசா​ரணையை வரும் 30-ம் தேதிக்கு தள்​ளி​வைத்​தனர். மேலும், நேற்று நடந்த விசா​ரணை​யின்​போது, நீதிபதி யஷ்வந்த் வர்​மா, தனது மனு​வில் தன்​னுடைய பெயரையோ, அடை​யாளத்​தையோ குறிப்​பி​டாதது ஏன் என்​பது தொடர்​பாக நீதிப​தி​கள் தீபாங்​கர் தத்​தா, மாசி ஆகியோர் கேள்வி எழுப்​பினர்.

உச்ச நீதி​மன்​றத்​தின் வழக்கு பட்​டியலில் நீதிபதி யஷ்வந்த் வர்மா தொடர்ந்த இந்த வழக்​கின் பெயர் XXX vs மத்​திய அரசு என்று குறிப்​பிடப்​பட்​டுள்​ளது. யஷ்வந்த் வர்​மா, தனது மனு​வில் அடை​யாளத்தை வெளி​யி​டா​மல் இருக்க அனு​மதி வழங்​கு​மாறு உச்ச நீதி​மன்​றத்​திடம் அனு​மதி கேட்​டுள்​ளார்.

பொது​வாக பாலியல் வழக்​கிலோ அல்​லது சிறு​வர்​கள் தொடர்​பான வழக்​கிலோ அவர்​கள் அடை​யாளத்தை பயன்​படுத்​தக்கூ​டாது என்​ப​தற்​காக இது​போன்ற முறை பின்​பற்​றப்​படும். ஆனால் கட்​டுக்​கட்​டாக பணம் சிக்​கிய விவ​காரத்​தில் XXX என்று குறிப்பிடப்பட்​டுள்​ளது.