சிவகார்த்திகேயன் எப்படிப்பட்டவர்னு தெரியுமா? ஈரோடு மகேஷ் குற்றசாட்டுக்கு தீனா பதில்

சென்னை: நடிகர் தர்ஷன் மற்றும் விஜய் டிவி பிரபலம் தீனா ஆகியோர் இணைந்து நடித்திருக்கும் 'ஹவுஸ் மேட்' திரைப்படத்தின் புரமோஷன் பேட்டியின் போது, நடிகர் சிவகார்த்திகேயன் குறித்து எழுந்த சர்ச்சை குறித்து தீனாவிடம் கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு தீனா அளித்த வெளிப்படையான பதில், சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. சிவகார்த்திகேயன் குறித்து பரவிய வதந்திகளுக்குத் தீனா கொடுத்த விளக்கம், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
சர்ச்சைக்குப் பதில் அளித்த தீனா
சில மாதங்களுக்கு முன்பு, நடிகர் ராஜு நடித்த திரைப்படத்தின் புரமோஷன் நிகழ்வில் ஈரோடு மகேஷ் கலந்துகொண்டு பேசியிருந்தார். அப்போது அவர், "இப்போதுள்ள சில நடிகர்கள் கடந்த காலத்தை எல்லாம் மறந்துவிடுகிறார்கள். ஒரு நடிகர் ஆரம்பத்தில் என்னை அண்ணா என்று பேசுவார். சில வருடங்கள் கழித்த பிறகு 'எப்படி இருக்கீங்க ப்ரோ ' என்று கேட்டார். அதற்குப் பிறகு, இப்போ அவர் சினிமாவில் முக்கிய நபராக மாறியதும், 'என்ன, எப்படி இருக்கீங்க? உங்களையெல்லாம் முன்னாடி மாதிரி பார்க்க முடியலையே' என்று அலட்சியமா பேசுறாரு," என்று பேசியிருந்தார். இந்த பேச்சு, நடிகர் சிவகார்த்திகேயனைப் பற்றித் தான் என்றும், சிவகார்த்திகேயன் தான் இப்படிப் பேசியிருக்கிறார் என்றெல்லாம் சில வதந்திகள் பரவி வந்தன.
இந்தச் சர்ச்சை குறித்து தீனாவிடம் கேட்கப்பட்டபோது, அவர் கூறியதாவது: "ஈரோடு மகேஷ் அண்ணா பேசியதை நானும் கேட்டேன். ஆனால் அவர் யாரை நினைத்து அப்படிப் பேசினார் என்று தெரியாது. சிவகார்த்திகேயன் எந்த ஒரு நிகழ்ச்சிக்கு வந்தாலும், அந்த நிகழ்ச்சியில் அங்கு இருக்கும் அவருடைய சீனியர்கள் எல்லோரிடமும் பேசிவிட்டுத்தான் மேடைக்குச் செல்வார். அதுபோல எல்லா மேடைகளிலும் அவருடைய சீனியர்கள் பற்றிப் பெருமையாகத் தான் பேசுவார். அதனால் சிவகார்த்திகேயன் அண்ணன் அப்படி நடந்து இருப்பார் என்று சொல்லவே முடியாது."
மேலும், "விஜய் டிவியில் இருந்து இப்போ நாங்க பலர் சினிமாவில் இருக்கிறோம். அதில் அதிகமானோருக்கு சிவகார்த்திகேயன் அண்ணன்தான் உதவி செய்தது. நான் ஆரம்பத்தில் சினிமாவிற்கு முயற்சி செய்தபோது எனக்குத் தங்குவதற்கு இடம் கொடுத்து, பலரிடமும் வாய்ப்பு வாங்கிக் கொடுத்தது சிவகார்த்திகேயன் அண்ணன் தான். எனக்கு மட்டுமல்ல, பலருக்கு அவர் பல உதவிகளைச் செய்து இருக்கிறார்," என்று தீனா அழுத்தமாகத் தெரிவித்தார். தீனாவின் இந்தப் பேச்சு, சிவகார்த்திகேயன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஒரு சரியான பதிலாக அமைந்துள்ளது.
சிவகார்த்திகேயன் - ஒரு பன்முகப் பயணம்
சிவகார்த்திகேயன், ஒரு மிமிக்ரி கலைஞராகவும், தொகுப்பாளராகவும் விஜய் டிவியில் தனது பயணத்தைத் தொடங்கினார். 'கலக்கப்போவது யாரு?', 'அது இது எது?', 'சூப்பர் சிங்கர்' போன்ற நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி, இளைஞர்கள் மத்தியில் பெரும் பிரபலமானார். அவரது தனித்துவமான நகைச்சுவை உணர்வும், இயல்பான பேச்சும் ரசிகர்களைக் கவர்ந்தன...
சினிமாவில் அசுர வளர்ச்சி
'மெரினா' திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமான சிவகார்த்திகேயன், 'மனம் கொத்திப் பறவை', 'கேடி பில்லா கில்லாடி ரங்கா' போன்ற படங்களின் மூலம் தனது நடிப்பைத் திறமையை வெளிப்படுத்தினார். 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்', 'மான் கராத்தே', 'ரஜினி முருகன்', 'ரெமோ', 'வேலைக்காரன்', 'டாக்டர்', 'டான்', 'மகா வீரன்', 'அயலான்' போன்ற படங்கள் அவரை ஒரு முன்னணி நட்சத்திரமாக உயர்த்தின. அவரது படங்கள் பெரும்பாலும் குடும்பத்துடன் ரசிக்கும் வகையில் இருப்பதால், அவருக்குக் குடும்ப ரசிகர்கள் அதிகம்...
உதவும் மனப்பான்மை
சிவகார்த்திகேயன், தன்னை நம்பி வரும் பல இளம் கலைஞர்களுக்கும், உதவி கேட்பவர்களுக்கும் தொடர்ந்து உதவி செய்து வருகிறார். அருண்ராஜா காமராஜ் தனது பள்ளித் தோழரான அருண்ராஜா காமராஜுக்கு 'கனா' திரைப்படம் தயாரிக்க உதவியதுடன், அப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்தார். பல புதுமுக இயக்குநர்களுக்கும், நடிகர்களுக்கும் வாய்ப்பு அளித்துள்ளார். தனது படங்களில் புதிய திறமைகளை அறிமுகப்படுத்துவதிலும் ஆர்வம் காட்டி வருகிறார். திரையுலகில் வாய்ப்பு தேடும் பலருக்குப் பண ரீதியாகவும், தொடர்புகள் மூலமாகவும் உதவி செய்துள்ளார். தீனாவுக்கும், தர்ஷனுக்கும் உதவியது இதற்குச் சிறந்த உதாரணம்..