கும்மிடிப்பூண்டியில் 10 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: இளைஞரை கைது செய்ய 3 சிறப்பு குழு தீவிரம்

கும்மிடிப்பூண்டியில் 10 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: இளைஞரை கைது செய்ய 3 சிறப்பு குழு தீவிரம்
டிஜிபி சங்​கர் ஜிவால்

கும்மிடிப்பூண்டி: கும்​மிடிப்​பூண்டி அருகே ஆரம்​பாக்​கத்​தில் 10 வயது சிறுமியை பாலியல் வன்​கொடுமை செய்த இளைஞரை கைது செய்ய 3 சிறப்பு குழுக்​களை அமைக்க தமிழக காவல்​துறை தலைமை இயக்​குநர் (டிஜிபி) சங்​கர் ஜிவால் உத்​தர​விட்​டார்.

திரு​வள்​ளூர் மாவட்​டம், கும்​மிடிப்​பூண்டி அருகே ஆரம்​பாக்​கம் பகு​தியை சேர்ந்​த 10 வயது சிறுமி, ஆரம்​பாக்​கத்​தில் உள்ள பள்ளி ஒன்​றில் 4-ம் வகுப்பு படித்து வரு​கிறார். இந்​நிலை​யில், கடந்த 12-ம் தேதி வழக்​கம் போல் பள்​ளிக்​குச் சென்ற சிறுமி, அன்று சனிக்​கிழமை என்​ப​தால் மதி​யமே பள்ளி முடிந்து, ஆரம்​பாக்​கத்​தில் உள்ள தன் பாட்டி வீட்​டுக்கு செல்​வதற்​காக, ரயில் நிலை​யத்தை கடந்து சென்​றுள்​ளார். அவரை பின் தொடர்ந்து வந்த இளைஞர், சிறுமியை மாந்​தோப்பு பகு​திக்கு தூக்​கிச் சென்​று, பாலியல் வன்​கொடுமை செய்துவிட்டு, தப்பியோடியுள்ளார்.

இதையடுத்து அழுத​வாறு பாட்டி வீட்​டுக்கு வந்த சிறுமி, நடந்த சம்​பவம் குறித்​து, பாட்​டி​யிடம் தெரி​வித்​துள்​ளார். தொடர்ந்​து, சிறுமி கும்​மிடிப்​பூண்டி கோட்​டக்​கரை​யில் உள்ள அரசு மருத்​து​வ​மனை​யில் முதலுதவி சிகிச்சை பெற்​று, பொன்​னேரி அரசு மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்டு சிகிச்சை பெற்று வந்​தார். பிறகு, அவர், சென்னை ஆர்​.எஸ்​.ஆர்​.எம் அரசு மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்டு தீவிர சிகிச்சை பெற்று வரு​கிறார். இச்​சம்​பவம் குறித்​து, ஆரம்​பாக்​கம் போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்​து, சம்பவ இடம் அருகே இருந்த கண்​காணிப்பு கேமரா காட்​சிகளை ஆய்வு செய்​தனர்.

அந்த ஆய்​வில், சிறுமியை இளைஞர் பின் தொடர்ந்து செல்​வது தெரிய​வந்​துள்​ளது. இதையடுத்​து, 5 தனிப்​படை போலீ​ஸார், ஆரம்பாக்​கம் பகு​தி​களில் பதி​வான கண்​காணிப்பு கேம​ராக்​களில் பதி​வான காட்​சிகள் உள்​ளிட்​ட​வற்​றின் அடிப்​படை​யில் இளைஞரை தீவிர​மாக தேடி வரு​கின்​றனர். இதற்​கிடையே, சிறுமிக்கு நடந்த பாலியல் வன்​கொடுமைக்கு அரசி​யல் கட்சி தலைவர்​கள் கடும் கண்​டனம் தெரி​வித்து வரு​கின்​றனர்.

இந்​நிலை​யில், சம்​பவம் நடந்து 6 நாட்​கள் கடந்​தும் சிறுமியை பாலியல் வன்​கொடுமை செய்த நபர் கைது செய்​யப்​ப​டாத​தால், ஆத்​திரம் அடைந்த சிறுமி​யின் உறவினர்​கள் நேற்று ஆரம்​பாக்​கம் காவல் நிலை​யத்தை முற்​றுகை​யிட்​டனர். அவர்​கள் சம்​பந்தப்பட்ட இளைஞரை கைது செய்​யக் கோரி முழக்​கமிட்​டனர். அவர்​களை சமா​தானப்​படுத்​திய போலீ​ஸார், ‘மிக விரை​வில் குற்ற​வாளி கைது செய்​யப்​படு​வார்’ என, உறு​தி​யளித்​தனர். ஆகவே, சிறுமி​யின் உறவினர்​கள் அங்​கிருந்து கலைந்து சென்​றனர்.

இச்​சூழலில், டிஜிபி சங்​கர் ஜிவால் நேற்று சிறுமியை பாலியல் வன்​கொடுமை செய்த இளைஞரை கைது செய்ய சிறப்பு குழுக்களை அமைக்க உத்​தர​விட்​டார். அதன் பேரில், வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க், திரு​வள்​ளூர் எஸ்பி விவே​கானந்த சுக்லா மேற்​பார்​வை​யில், திரு​வள்​ளூர், ஊத்​துக்​கோட்​டை, கும்​மிடிப்​பூண்டி ஆகிய 3 காவல் உட்​கோட்​டங்​களின் டிஎஸ்​பிக்​கள் தலைமையில் 3 சிறப்பு குழுக்​கள் அமைக்கப்பட்டுள்ளன.

அக்​குழுக்​களும், தனிப்​படை​யினரும், பாலியல் வன்​கொடுமை​யில் ஈடு​பட்ட இளைஞரை தீவிர​மாக தேடி வரு​கின்​றனர். மேலும், சம்​பந்​தப்​பட்ட இளைஞர் வடமாநில இளைஞ​ராக இருக்​கலாம் என்ற கோணத்​தில் 50-க்​கும் மேற்​பட்ட போலீ​ஸாருடன், தமிழக பகுதி​கள் மட்​டுமல்​லாமல், கும்மிடிப்​பூண்​டியை ஒட்​டி​யுள்ள தடா, சூளூர்​பேட்டை உள்​ளிட்ட ஆந்​திர பகு​தி​களி​லும் சிறப்பு குழுக்கள், தனிப்​படை​யினர் தேடு​தல் வேட்​டை​யில் ஈடுபட்டு வருகின்றனர்.