இன்றைய இலக்கியம்

இன்றைய இலக்கியம்
புலவர் கபில தேவர்

 இன்னா நாற்பது 

பாடல் எண்: 40 

"அடக்க முடையவன் மீளிமை யின்னா

துடக்க மிலாதவன் றற்செருக் கின்னா

அடைக்கலம் வவ்வுத லின்னாவாங் கின்னா

அடக்க வடங்காதார் சொல்". . 

                                                -புலவர் கபில தேவர்.

விளக்கம்:

               அடக்கமுடையவனின் செருக்கு துன்பமாம். முயற்சி இல்லாதவன் தன்னைத்தானே புகழ்தல் துன்பமாம். பிறர் அடைக்கலமாக வைத்தப் பொருளை கவர்ந்து கொள்ளுதல் துன்பமாம். அவ்வாறே அறிவுடையோர்கள் அடக்கமில்லாதவனுக்குக் கூறும் சொல் துன்பமாம்.