உத்​தர பிரதேசத்​தில் முதன்முறையாக மதுபானத் தொழில் முதலீட்டு மாநாடு: ரூ.5,000 கோடி ஒப்பந்தங்களை எதிர்பார்க்கும் அரசு

உத்​தர பிரதேசத்​தில் முதன்முறையாக மதுபானத் தொழில் முதலீட்டு மாநாடு: ரூ.5,000 கோடி ஒப்பந்தங்களை எதிர்பார்க்கும் அரசு
.5,000 கோடி ஒப்பந்தங்களை எதிர்பார்க்கும் அரசு

புதுடெல்லி: உத்​தரபிரதேசத்​தில் முதன்​முறை​யாக மது​பானத் தொழிலுக்​கான மெகா முதலீட்டு மாநாடு இன்று (ஜுலை 10) நடை​பெற உள்​ளது. இதில், ரூ.5,000 கோடி மதிப்​பிலான முதலீட்டு திட்​டங்​களுக்கு புரிந்​துணர்வு ஒப்​பந்​தம் கையெழுத்​தாகலாம் என 

உ.பி.​தொழில்​களை ஊக்​குவிக்க முதலீட்டு மாநாடு​கள் நடை​பெற்று வரு​கின்​றன. இதில் முதன்​முறை​யாக மது உற்​பத்​தியை ஊக்​குவிக்​கும் முதலீட்டு மாநாடும் நடை​பெற உள்​ளது. இந்த மாநாட்டை லக்​னோ​வின் இந்​திரா காந்தி பிர​திஷ்​டானில் மாநில கலால் துறை நடத்​துகிறது. இதில் 200-க்​கும் மேற்​பட்ட நிறு​வனங்​கள் பங்​கேற்​கும் எனவும் சுமார் ரூ.5,000 கோடி மதிப்​பிலான திட்​டங்​களுக்கு புரிந்​துணர்வு ஒப்​பந்​தங்​கள் கையெழுத்​தாகும் எனவும் எதிர்​பார்க்​கப்​படு​கிறது

.உ.பி.​யில் பிற தொழில்​களு​டன் இணைந்து மது​பான தயாரிப்​புக்​கும் கடந்த ஆண்​டு​களில் முதலீட்டு திட்​டங்​கள் கையெழுத்​தாகின. அவற்​றில் சில தற்​போது செயல்​பாட்​டில் உள்​ளன. இச்​சூழலில், உ.பி.​யில் மது​பான உற்​பத்தி அதி​கரித்​தால் அரசுக்கு கலால் வரி வரு​மானம் அதி​கரிக்​கும் என்​ப​தால் மது​பானத் தொழிலுக்கு என தனி மாநாடு நடை​பெறுக

உ.பி.​யில் பிற தொழில்​களு​டன் இணைந்து மது​பான தயாரிப்​புக்​கும் கடந்த ஆண்​டு​களில் முதலீட்டு திட்​டங்​கள் கையெழுத்​தாகின. அவற்​றில் சில தற்​போது செயல்​பாட்​டில் உள்​ளன. இச்​சூழலில், உ.பி.​யில் மது​பான உற்​பத்தி அதி​கரித்​தால் அரசுக்கு கலால் வரி வரு​மானம் அதி​கரிக்​கும் என்​ப​தால் மது​பானத் தொழிலுக்கு என தனி மாநாடு நடை​பெறுகிறது.

இதுகுறித்து உ.பி. கலால் துறை இணை​யமைச்​சர் (தனிப் பொறுப்​பு) நிதின் அகர்​வால் கூறுகை​யில், “கடந்த ஆண்​டு​களில் 'இன்​வெஸ்ட் உ.பி.’ திட்​டம் மூலம் மாநிலத்​தில் மது​பானம் அடிப்​படையி​லான தொழில்​களில் ரூ.39,479.39 கோடி முதலீட்​டுக்​கான 142 திட்​டங்​கள் பெறப்​பட்​டன. இதற்​காக 135 புரிந்​துணர்வு ஒப்​பந்​தங்​கள் கையெழுத்​தாகின. இவற்​றில் 46 நிறு​வனங்​கள் ரூ.7,888.73 கோடியை முதலீடு செய்​கின்​றன. 19 நிறு​வனங்​கள் ரூ.2,339.6 கோடியை முதலீடு செய்து உற்​பத்​தியை தொடங்​கி​யுள்​ளன’’ என்​றார்.

உபி அரசின் கலால் கொள்​கை​யின் கீழ், நடப்பு நிதி​யாண்​டில் 3,171 உள்​நாட்டு மது​பானக் கடைகள் குறைக்​கப்​பட்​டுள்​ளன. அதேசம​யம், 3,392 பியர் கடைகள் மற்​றும் 2,799 வெளி​நாட்டு மது​பானக் கடைகள் அதி​கரிக்​கப்​பட்​டுள்​ளன. கிராமப்​புறங்​களில் 2,791 உள்​நாட்டு மது​பானக் கடைகளில் பியர் விற்​பனை செய்ய அனு​மதி வழங்​கப்​பட்​டுள்​ளது.

 

2016-17-ம் ஆண்​டில் உ.பி. கலால் துறை ரூ.14,273.33 கோடி வரு​வாய் ஈட்​டியது. இது, 2024-25-ம் ஆண்​டில் ரூ.52,573.07 கோடி​யாக அதி​கரித்​துள்​ளது. உயிரி எரிபொருள் கொள்​கை​யின் கீழ் உத்​தரபிரதேசம் 182.6 கோடி லிட்​டர் பவர் ஆல்​கஹால் உற்​பத்தி செய்​து நாட்​டிலேயே முதலிடத்​தில்​ உள்​ளது.

தமிழ்நாட்டில் மது அருந்துபவர்கள் எண்ணிக்கை வேறு எந்த மாநிலத்தையும்விட அதிகரித்துவிட்டது.தமிழ்நாட்டு மக்கள் எல்லோரும் மது அருந்துகிறார்கள் என்றெல்லாம் இங்குள்ள வலதுசாரிகள் புலம்புவது வழக்கம்.தமிழ்நாட்டில் 4829 டாஸ்மாக் மதுக்கடைகள் மட்டுமே உள்ளன.2023 ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசு 500 டாஸ்மாக் மதுக்கடைகளை மூடியது

2024-25 ஆம் ஆண்டில் மது விற்பனையின்மீது விதிக்கப்பட்ட கலால் வரி மூலம் தமிழ்நாடு அரசு ரூ 11020.48 கோடி வருவாயை ஈட்டியது.இது அதன் மொத்த வருவாயான ரூ 2,93,906 கோடியில் 3.75 % மட்டுமே.உத்தரபிரதேசத்தில் சாமியார் என்று சொல்லிக்கொள்பவர் ஆட்சியில்,27,352 மதுக்கடைகள் உள்ளன.2020-21 ஆம் ஆண்டில் 2076 புதிய மதுக்கடைகள் திறக்கப்பட்டன.2024.25 ஆம் ஆண்டில் மது விற்பனையின் மீது விதிக்கப்பட்ட கலால் வரி மூலம் உத்தரபிரதேச அரசுக்கு வந்த வருவாய் ரூ 52573.07 கோடி.உபி அரசின் மொத்த வருவாயில் இது 10%.2016.17 ஆம் ஆண்டில் மதுவிற்பனை மூலம் உபி அரசுக்கு கிடைத்த வரி வருவாய் ரூ 14273.33 கோடி மட்டுமே.மதுவிற்பனை மூலம் வருவாய்,யோகி அரசின்கீழ் 268% அதிகரித்துள்ளது.வலதுசாரிகளுக்கு இந்த புள்ளி விவரமெல்லாம் தெரியாது.ஆனால் தமிழ்நாடு அரசுதான் மது விற்பனை செய்து அரசை நடத்திவருகிறது என்று நாக்கூசாமல் பேசுவார்கள்