புதிய டிஜிபியை தேர்வு செய்யும் பணிகள் தீவிரம்: சந்தீப் ராய் ரத்தோர், சீமா அகர்வால் இடையே கடும் போட்டி

புதிய டிஜிபியை தேர்வு செய்யும் பணிகள் தீவிரம்: சந்தீப் ராய் ரத்தோர், சீமா அகர்வால் இடையே கடும் போட்டி
சந்தீப்ராய் ரத்தோர், சீமா அகர்வால்

சென்னை: அடுத்த மாதத்​துடன் டிஜிபி சங்​கர் ஜிவால் ஓய்வு பெற உள்ள நிலை​யில், புதிய டிஜிபிக்​கான பட்​டியல் தயாராகியுள்ளது. இதில் சந்​தீப் ராய் ரத்​தோர், சீமா அகர்வால் இடையே கடும் போட்டி நிலவுவதாக தகவல் வெளி​யாகி உள்​ளது.

தமிழக காவல் துறை​யில் 14 டிஜிபி பணி​யிடங்​கள் இருந்​தா​லும் சட்​டம் - ஒழுங்கு டிஜிபியே தலைமை டிஜிபி​யாக​வும், காவல் படை தலை​வ​ராக​வும் செயல்​படு​வார். தற்​போது பதவி​யில் உள்ள சங்​கர் ஜிவாலின் பதவிக்​காலம் அடுத்த மாதம் (ஆகஸ்ட்) 31-ம் தேதியுடன் நிறைவடைகிறது.

இதையடுத்​து, அடுத்த டிஜிபியை தேர்வு செய்​யும் பணி​யில் தமிழக அரசு ஈடு​பட்​டுள்​ளது. இதன் முதல்​கட்​ட​மாக சட்​டம் - ஒழுங்கு டிஜிபிக்கு தகு​தி​யான 8 பேர் பட்​டியலை தயார் செய்​யும் பணி தொடங்கி உள்​ளது.

இந்த பட்​டியலில் 1990-ல் தேர்​வான சீமா அகர்வால், 1992-ல் தேர்​வான ராஜீவ் குமார், அதே ஆண்​டில் தேர்​வான சந்​தீப் ராய் ரத்​தோர், அபய் குமார் சிங், வன்னி பெரு​மாள், 1994-ல் தேர்​வான மகேஷ் குமார் அகர்​வால், அதே ஆண்​டில் தேர்​வான வெங்​கட்​ராமன், வினித் தேவ் வான்​கடே, சஞ்​சய் மாத்​தூர் உள்​ளனர்.

.

இவர்​களு​டன் 1988-ல் தேர்​வான சஞ்​சய் அரோ​ரா, 1989-ல் தேர்​வான பிரமோத் குமார் ஆகியோ​ரும் உள்​ளனர். இந்த இரு​வருடன் அபய் குமார் சிங்​கின் பதவி கால​மும் 6 மாதங்​களுக்​கும் குறை​வாகவே உள்​ளது. எனவே, இவர்​கள் பட்​டியலில் இடம் பெற வாய்ப்பு இல்​லை. மீதம் உள்ள 8 பேர் பட்​டியல் தயாரிக்​கப்​பட்​டுள்​ளது. இந்த பட்​டியல் விரை​வில் டெல்​லிக்கு அனுப்​பப்பட உள்​ளது.

தமிழக அரசு அனுப்​பும் 8 பேர் கொண்ட பட்​டியலில் தகு​தி​யுள்ள 3 பேரை தேர்வு செய்து மத்​திய அரசு, தமிழக அரசுக்கு அனுப்​பும். அவர்​களில் ஒரு​வரை, முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் டிஜிபி​யாக (சட்​டம் - ஒழுங்​கு) நியமிப்​பார். சீனி​யாரிட்டி அடிப்​படை​யில் டி.ஜி.பிக்கள் சீமா அகர்​வால், ராஜீவ் குமார் மற்​றும் சந்​தீப் ராய் ரத்​தோர் ஆகிய மூவரும் முதலிடத்​தில் உள்​ளனர்.

இந்த மூன்று அதி​காரி​களும் மத்​திய அரசில் பணி​யாற்​றிய அனுபவம் கொண்​ட​வர்​கள். இவர்​கள் 3 பேரை​யும் மத்​திய அரசு பரிசீலித்து தமிழக அரசுக்கு அனுப்​பலாம். பணி அனுபவம், தகுதி மற்​றும் செயல்​திறன் அடிப்​படை​யில் இந்த 3 பேர் பட்​டியலில் மாற்​றம் ஏற்​பட​வும் வாய்ப்பு உள்​ளது.

இருப்​பினும் சீமா அகர்​வால், சந்​தீப் ராய் ரத்​தோர் இடையே புதிய டிஜிபிக்​கான போட்டி உள்ள​தாக​வும் அதில் சந்​தீப் ராய் ரத்​தோர் முந்​து​வதற்​கான வாய்ப்பு உள்​ள​தாக​வும் போலீஸ் வட்​டாரத்​தில் பேசப்​பட்டு வரு​கிறது. இன்​னும்​ ஒரு மாதத்​தில்​ முடிவு தெரிந்துவிடும்​.