பிரதமர் கிசான் சம்மான் நிதி திட்டம்: 9.7 கோடி விவசாயிகளுக்கு ரூ.20,500 கோடி விடுவிப்பு

பிரதமர் கிசான் சம்மான் நிதி திட்டம்: 9.7 கோடி விவசாயிகளுக்கு ரூ.20,500 கோடி விடுவிப்பு
பிரதமர் கிசான் சம்மான் நிதி திட்டம்: 9.7 கோடி விவசாயிகளுக்கு ரூ.20,500 கோடி விடுவிப்பு

வாராணசி: பிரதமர் கிசான் சம்​மான் நிதி திட்​டத்​தில் 20-வது தணை​யாக 9.7 கோடி விவ​சா​யிகளுக்கு நேற்று சுமார் ரூ.20,500 கோடி விடுவிக்​கப்​பட்​டது. பிரதமர் நரேந்​திர மோடி இதனை விடு​வித்​தார்.

கடந்த 2019-ல் பிரதமர் மோடி தலை​மையி​லான மத்​திய அரசால் பிரதமர் கிசான் சம்​மான் நிதி திட்​டம் தொடங்​கப்​பட்​டது. இத்​திட்​டத்​தின் கீழ் தகு​தி​யுள்ள விவ​சா​யிகளின் வங்​கிக் கணக்​கு​களில் ஆண்​டுக்கு ரூ.6,000 செலுத்​தப்​படு​கிறது. இது தலா ரூ.2,000 வீதம் 3 தவணை​களில் வழங்​கப்​படு​கிறது. இந்த திட்​டத்​தில் இது​வரை 19 தவணை​களில் விவ​சா​யிகளுக்கு சுமார் ரூ.3,69,000 கோடி வழங்​கப்​பட்​டுள்​ளது.

இந்​நிலை​யில் இத்​திட்​டத்​தின் 20-வது தவணை​யாக 9.7 கோடி விவ​சா​யிகளுக்கு சுமார் ரூ.20,500 கோடி நேற்று விடுவிக்​கப்​பட்​டது. பிரதமர் நரேந்திர மோடி தனது சொந்த தொகு​தி​யான, உ.பி.​யின் வாராணசி​யில் நேற்று பயணம் மேற்​கொண்ட நிலை​யில் அங்​கிருந்து இந்த தொகையை அவர் விடு​வித்​தார்.

இ-கேஒய்சி கட்​டா​யம்இத்​திட்​டத்​தில் விவ​சா​யிகளுக்கு இ-கேஒய்சி கட்​டா​யம் ஆக்​கப்​பட்​டுள்​ளது. அரு​கில் உள்ள பொது சேவை மையங்​களில் இதனை விவ​சா​யிகள் சமர்ப்​பிக்​கலாம் என வேளாண் அமைச்​சகம்​ அறி​வித்​துள்​ளது.