இன்றைய இலக்கியம்

இன்றைய இலக்கியம்
விளம்பி நாகனார்

நான்மணிக்கடிகை 

பாடல் எண் :014

வளப்பாத்தி யுள்வளரும் வண்மை கிளைக்குழம்

இன்சொற் குழியுள் இனிதெழூஉம் வன்சொல்

கரவெழூஉங் கண்ணில் குழியுள் இரவெழூஉம்

இன்மைக் குழியுள் விரைந்து. . .

                                              -விளம்பி நாகனார்

விளக்கம்:

செல்வ வளம் எனும் பாத்தியுள் ஈகைக் குணம் வளரும். இன்சொல் எனும் பாத்தியுள் உறவினர் கூட்டம் வளரும். கருணையற்ற கடுஞ்சொற்களைப் பேசும் பாத்தியுள் வஞ்சனை வளரும். வறுமையாகிய பாத்தியுள் இரத்தல் எனும் பயிர் விளையும்.