ரசாயன ஆலை விபத்தில் உயிரிழப்பு 44 ஆக அதிகரிப்பு

ரசாயன ஆலை விபத்தில் உயிரிழப்பு 44 ஆக அதிகரிப்பு
ரசாயன ஆலை விபத்தில் உயிரிழப்பு 44 ஆக அதிகரிப்பு

ஹைதராபாத்: தெலங்​கானா தலைநகர் ஹைத​ரா​பாத் அரு​கில், சங்​காரெட்டி மாவட்​டம் பாஷமைலாரம் பகு​தி​யில் கடந்த 40 ஆண்டு​களாக சிகாச்சி ரசாயன தொழிற்​சாலை இயங்கி வரு​கிறது. இங்கு கடந்த ஜூன் 30-ம் தேதி ரியாக்​டர் டேங்க் திடீரென வெடித்​த​தில் 40 தொழிலா​ளர்​கள் பரி​தாப​மாக உயி​ரிழந்​தனர். மேலும் 33 பேர் படு​கா​யம் அடைந்தன.

இறந்​தவர்​களின் குடும்​பத்​தினருக்கு தெலங்​கானா அரசு தலா ரூ.1 கோடி​யும், சிகாச்சி நிறு​வனம் தலா ரூ.1 கோடி​யும் நிவாரண​மாக அறி​வித்​தன. மேலும் காயமடைந்​தவர்​களுக்​கும் நிதி உதவி அறிவிக்​கப்​பட்​டது. இந்த கோர விபத்​தில் பலரது உடல்​கள் உருக்​குலைந்து போன​தால் டிஎன்ஏ பரிசோதனை​யில் அடை​யாளம் கண்டு உறவினர்​களிடம் உடல்​கள் ஒப்​படைக்​கப்​பட்​டனர்.

விபத்தில் கட்டிடம் இடிந்து தரைமட்​ட​மான​தால், இதன் இடி​பாடு​களில் சிக்​கி​யும் பலர் உயி​ரிழந்​தனர். இந்​நிலை​யில் இடி​பாடு​கள் முற்​றி​லு​மாக அகற்​றப்​பட்​டாலும் இன்​னும் 8 பேரை காண​வில்​லை. இவர்​கள் என்​ன​வா​னார்​கள் என்ற கேள்வி எழுந்​துள்​ளது.இந்​நிலை​யில், மருத்​து​வ​மனை​யில் சிகிச்சை பெற்று வந்​தவர்​களில் 4 பேர் நேற்று பரி​தாப​மாக உயி​ரிழந்​தனர். இதனால் உயி​ரிழந்​தோர் எண்​ணிக்கை 44 ஆக உயர்ந்​துள்​ளது.