என் பொண்டாட்டி சாமி சார்.. மிடில் கிளாஸ் வாழ்க்கை பொக்கிஷம்! நெகிழ வைத்த இளைஞர்.. இது சரியா பாஸ்

என் பொண்டாட்டி சாமி சார்.. மிடில் கிளாஸ் வாழ்க்கை பொக்கிஷம்! நெகிழ வைத்த இளைஞர்.. இது சரியா பாஸ்
ஒளிபரப்பாகி வரும் "வா தமிழா வா" தமிழ் நிகழ்ச்சியில் இந்த வாரம் எபிசோட்டில் "மிடில் கிளாஸ்

சென்னை: கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகி வரும் "வா தமிழா வா" தமிழ் நிகழ்ச்சியில் இந்த வாரம் எபிசோட்டில் "மிடில் கிளாஸ் வாழ்க்கையை விரும்புபவர்கள், அதை வெறுப்பவர்கள்" என்ற தலைப்பில் விவாதம் நடைபெற்றது. மிடில் கிளாஸ் வாழ்க்கையை விரும்புபவர் அணியில் இருந்த ஒரு ஆண் தன்னுடைய மனைவியைப் பற்றி பேசிய விஷயம் தான் இணையத்தில் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. தன்னுடைய மனைவிதான் தனக்கு சாமி என்று கூறி இருக்கிறார். அதோடு பணம் அதிகமாக இல்லை என்றாலும் தான் எப்படி சந்தோஷமாக வாழுவேன் என்று அதில் பெருமையாக பேசி இருக்கிறார்.

ரியாலிட்டி நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இதனாலையே புதியது புதிய பெயரில் பல நிகழ்ச்சிகள் தொடங்கப்பட்டு வருகிறது. விஜய் டிவியில் நீயா நானா நிகழ்ச்சி பெரிய அளவில் வரவேற்பு பெற்றது. அதே போல ஜீ தமிழிலும் தமிழா தமிழா நிகழ்ச்சி தொடங்கப்பட்டு வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. இப்போது அந்த நிகழ்ச்சியை போன்று கலைஞர் டிவியில் வா தமிழா வா என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியை நடிகர் பிக் பாஸ் பிரபலமான ஆரி தான் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியிலும் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு தலைப்பில் விவாதம் நடைபெற்று வருகிறது.

அதில் இந்த வார விவாதம் தான் இணையத்தில் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. அதாவது இந்த வாரத்தில் அந்த நிகழ்ச்சியில் மிடில் கிளாஸ் வாழ்க்கையை விரும்புபவர்கள் மற்றும் அந்த வாழ்க்கையை வெறுப்பவர்கள் கலந்து கொண்டு விவாதிக்கிறார்கள். பலர் மிடில் கிளாஸ் ஆக இருப்பதால் பட்ட அவமானங்கள் குறித்து கண்கலங்க பேசியிருக்கிறார்கள். அது பலருடைய வலி வேதனை நிறைந்த வார்த்தைகளாக இருக்கிறது. குழந்தையாக இருக்கும் போது தொடங்கி முதுமை வாழ்க்கை வந்தாலும் நடுத்தர வர்க்கத்தினரை பார்க்கும் போது மற்றவர்களின் ஏளன பேச்சு மற்றும் பல அவமானங்கள் பற்றி இந்த நிகழ்ச்சியில் பலர் மனம் திறந்து பேசி இருக்கிறார்கள்.