இன்றைய இலக்கியம்

இன்றைய இலக்கியம்
சமண முனிவர்கள்

அறத்துப்பால்-துறவறவியல்

பொறையுடைமை அதிகாரம்

பாடல்  எண்:71

கோதை யருவிக் குளிர்வரை நன்னாட

பேதையோடு யாதும் உரையற்க - பேதை

உரைப்பிற் சிதைந்துரைக்கும் ஒல்லும் வகையான்

வழுக்கிக் கழிதலே நன்று.

                                   -சமண முனிவர்கள்    

 

பொருளுரை:

மாலை போன்ற அருவிகளாலே குளிர்ந்த மலைகளையுடைய மன்னனே! அறிவில்லாதவனோடு எதையும் சொல்லவேண்டாம்! அவனிடம் ஒன்றைச் சொன்னால் அவன் மாறுபட்டுப் பதில் உரைப்பான். ஆதலின் கூடுமானவரை அப்பேதையிடமிருந்து தப்பித்து நீங்குதல் நல்லது.